திருப்பூர், டிச. 27 – அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் மனைப் பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப் படுத்தியதில் மிகப்பெருமளவு முறைகேடு நடைபெற்றுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத் தில் அதிகாரிகள் துணையுடன் நடத்தப்பட்ட இந்த ஊழல் முறைகேடு காரணமாக அர சுக்கு மிகப்பெரும் வருவாய் இழப்பும், மனைப் பிரிவுகளில் அடிப்படை வசதிகள் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு: முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன் முறைப்படுத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. அதன்படி 2016ஆம் ஆண்டு அக்டோ பர் 20ஆம் தேதிக்கு முன்பு பதிவு செய்யப் பட்ட, அனுமதியற்ற மனைகளை, உரிய கட்ட ணம் செலுத்தி வரன்முறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட் டது. இவ்வாறு அனுமதியற்ற மனைப்பிரிவு களை வரன்முறைப்படுத்துவதில் கிடைக் கும் வளர்ச்சிக் கட்டணம், அந்தந்த மனைப் பிரிவுகள் அமைந்துள்ள ஊராட்சிகளுக்கு உரிய தனி கணக்காக இருப்பு வைக்கப் படும். பின்னர் நகர் ஊரமைப்புத் துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டு, அதன் ஆவண மும் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் அடிப்படை யில் அந்த மனைகளில் சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வளர்ச்சிப் பணி களை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகங் கள் மேற்கொள்ள வழிகாட்டுதல் வழங்கப் பட்டு இருக்கிறது.
ருக்மா கார்டன்
இந்த நிலையில், அவிநாசி ஊராட்சி ஒன்றி யம் நம்பியாம்பாளையம் ஊராட்சியில் சர்வே எண் 189/2-இல் அமைந்துள்ள ருக்மா கார்டன் என்ற மனைப்பிரிவில் தனிம னைகள் வாங்கியோர் அங்கு அடிப்படை வச திகள் செய்து தரும்படி அந்த ஊராட்சி நிர்வா கத்தை அணுகியுள்ளனர். ஆனால் சம்பந்தப் பட்ட ஊராட்சியில் ருக்மா கார்டன் மனைப் பிரிவு வரன்முறைப்படுத்தப்பட்டதற்கான ஆவணங்களோ, அதற்கான நிதிக் கணக்கோ இல்லை. எனவே வரன்முறைப்படுத்தப் படாத நிலையில் விதிமுறைப்படி உரிய வச திகள் செய்துதர இயலாது என்று ஊராட்சி நிர் வாகத்தினர் கூறியுள்ளனர். எனினும் ருக்மா கார்டன் வரன்முறைப்ப டுத்தப்பட்டு விட்டதாகவும், அதற்குரிய சான் றாக, அப்போதைய அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்திலட்சுமி வழங்கிய வரன்முறை உத்தரவு நகல் என்று ஒரு கடி தம், ஊராட்சி நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. மேலும் ருக்மா கார்டனில் மனை களை வாங்கி இருப்போர் என பெங்களூரைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு சிலரது பெயரில் மட் டும் மொத்தமாக பத்து, பதினைந்து மனை கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அந்த கடிதம் கொடுக்கப்பட்டா லும் ருக்மா கார்டனுக்கு செலுத்தப்பட்ட வரன் முறை கட்டண வகையில் தனி நிதிக்கணக்கு எங்கே என்ற கேள்விக்கு விடை கிடைக்க வில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்ட போது, ருக்மா கார்டன் வரன்முறைப்படுத் தப்பட்டதற்கான ஆவணமும் எங்களிடம் இல்லை, அதற்குரிய நிதிக்கணக்கும் இல்லை. இது தொடர்பாக உயர் அதிகாரி களுக்கும் தகவல் தெரிவித்து கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது, இதுவரை உரிய ஆவ ணம் கிடைக்கவில்லை, இதனால் அந்த பகு திக்கு உரிய வளர்ச்சிப் பணிகளும் செய்ய முடியவில்லை என்றனர்.
உத்தரவு கடிதம் உண்மையா?
ஆனால் கடந்த 2018ஆம் ஆண்டு நவம் பர் 14ஆம் தேதியிட்டு அவினாசி வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்திலட்சுமி என்பவ ரால் வழங்கப்பட்ட மனை வரன்முறை உத்த ரவு நகலில், ருக்மா கார்டனில் உள்ள ஒவ்வொரு தனி மனைக்கும் வரன்முறைக் கட் டணமாக தலா ரூ.3 ஆயிரத்து 345 வீதமும், வளர்ச்சிக் கட்டணமாக தலா ரூ.2 ஆயிரத்து 787 வீதமும் செலுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கணக்கின்படி ருக்மா கார்டனில் உள்ள 130 தனிமனைகள் வரன்முறை செய் யப்பட்டிருந்தால் மொத்தம் ரூ.7 லட்சத்து 97 ஆயிரம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். இதில் வரன்முறைக் கட்டணம் ரூ.4 லட்சத்து 34 ஆயிரத்து 850 ஆகும், வளர்ச்சிக் கட்டணம் ரூ.3 லட்சத்து 62 ஆயிரத்து 310 என்ற அடிப் படையில் அதற்குரிய நிதி ஊராட்சிக்கு கிடைத்திருக்கும். அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட் சிகளுக்குத் தேர்தல் நடத்தப்படாத நிலை யில் சிறப்பு அலுவலர்களின் நேரடி கட்டுப் பாட்டில் கிராம ஊராட்சிகள் இருந்தன. வட் டார வளர்ச்சி அலுவலர்கள்தான், ஊராட்சி களின் தனி அலுவலர்களாகவும் இருந்தனர். எனவே அப்போதைய அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) தற் போதைய ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய ஆணையர் சாந்திலட்சுமிக்கு இது பற்றி தெரிந்திருக்கும் என்ற அடிப்படையில், அவரைத் தொடர்பு கொண்டபோது, வேறு வேலையாக இருப்பதாகக் கூறி, பதிலளிக்கா மல் அவர் தவிர்த்து விட்டார்.
லஞ்சத்தில் குளித்த அதிகாரிகள்
இதுபற்றி ஊரக வளர்ச்சித் துறையில் இருப்பவர்களைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, அதிமுக ஆட்சிக் காலத்தில் தனி அலு வலர்கள் பொறுப்பில் இருந்தபோது மிகப் பெருமளவு ஊழல், முறைகேடுகள் நடை பெற்றுள்ளன. மனை வரன்முறை பிரச்சனை யில், ரியல் எஸ்டேட் உரிமையாளர்களி டமோ, தனி மனை உரிமையாளர்களிடமோ உரிய கட்டணங்களை வசூலிக்காமல், தனிப் பட்ட முறையில் லஞ்சம் பெற்றுக் கொண்டு, மனை வரன்முறை செய்து தந்துள்ளனர். இத னால் ஒருபுறம் அரசுக்கும் கோடிக்கணக் கில் வருவாய் இழப்பு, மறுபுறம் மனைப்பிரி வுகளை வாங்கக்கூடிய குடியிருப்புவாசிக ளுக்கும், உரிய அடிப்படை கட்டமைப்பு வச திகள் செய்து தர முடியாமல், அவர்கள் ஏமா றும் நிலை ஏற்பட்டுள்ளது, என்றனர். இப்பிரச்சனையில் தணிக்கை செய்ய வேண்டிய மாவட்ட ஊராட்சிகள் தணிக்கை உதவி இயக்குநர் உள்ளிட்ட வளர்ச்சித் துறை அதிகாரிகளும் இப்பிரச்சனையைக் கண்டு கொள்ளவில்லை என்று புகார் கூறப்படு கிறது.
தேவை சிறப்பு விசாரணை
ருக்மா கார்டன் ஒரு மனைப் பிரிவு மட்டு மல்ல, இதுபோல் பல ஊராட்சிகளிலும் ஏரா ளமான மனைப் பிரிவுகளிலும் வரன்முறைப் படுத்துதலில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல், மோசடி நடைபெற்றிருக்கிறது என்று இத்துறை சார்ந்தவர்களே கூறுகின்றனர். வரன்முறைப்படுத்தியதன் உண்மைத் தன்மை அறியாமல் பத்திரப் பதிவுத் துறை யினரும் பதிவு செய்து கொடுத்துள்ளது எப் படி என்று கேள்வி எழுகிறது. எனவே சம்பந் தப்பட்ட பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகளை யும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் கூறு கின்றனர். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், ருக்மா கார்டன் போல் அவிநாசி ஊராட்சி ஒன்றியம் முழுவதும் வரன்முறைப்படுத்தப் பட்ட மனைப் பிரிவுகள் தொடர்பாக தனியாக சிறப்பு அலுவலரைக் கொண்டு ஆய்வு செய்து, தொடர்புடைய அலுவலர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும். இதில் குற்ற மிழைத்தோர் மீது துறைரீதியான நடவ டிக்கை மட்டுமின்றி, குற்றவியல் சட்ட அடிப்ப டையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனைப்பிரிவுகளில் மக்களுக்கு உரிய வசதி களைச் செய்து தர வேண்டும் என்று பாதிக் கப்பட்டோர் கூறினர். வே.தூயவன்