districts

img

மார்க்சிஸ்ட் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு

நாமக்கல், ஏப்.9- நாமக்கல் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். நாமக்கல் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி  சார்பில் கொமதேக வேட்பாளர் வி.எஸ்.மாதஸ்வரன் உதயசூ ரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவரை  ஆதரித்து மண்டக்காபாளையம், கொசவம்பாளையம், குமர மங்கலம், போக்கம்பாளையம், காந்தி ஆசிரமம், மோளிப் பள்ளி, ராயர்பாளையம், கிளாப்பாளையம், உஞ்சனை உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில் பிரச்சார பய ணத்தை துவக்கி வைத்து பேசினார். திருச்செங்கோடு சட்ட மன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சுநாதன், திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் செல்வ ராஜ், திமுக முன்னால் ஒன்றியச் செயலாளர் சக்திவேல், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்மணி, சுரேஷ், சிபிஐ  மாவட்டச் செயலாளர் அன்புமணி, கொமதேக ஒன்றியச் செய லாளர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.