திருப்பூர், அக். 31 - உடுமலை ஒன்றியம், குரல்குட்டை ஊராட்சியில் நிலத்தடி நீர் மற்றும் நீர் வழிப்பாதைகளை பாதுகாத்திடவும், ஆக் கிரமிப்புகளை அகற்றவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரு முனைப் பரப்புரைக் கூட்டத்தை நடத்தி யது. உடுமலை ஒன்றியம், குரல்குட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை கள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற இப்பரப்புரை இயக்கத்திற்கு குரல்குட்டை மேற்கு பகுதி கிளைச் செயலாளர் எம்.தட்சிணாமூர்த்தி தலைமை ஏற்றார். இந்த பரப்புரையை துவக்கி வைத்து சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் வே.விஸ்வநாதன் பேசி னார். குரல்குட்டை ஊராட்சியில் பெயர்ப் பலகை இல்லாமல் பதிவு செய்யாமல் சட்டவிரோதமாக செயல்படும் தனியார் நிறுவனங்களை தடை செய்யவும், கழிவு நீரை வெளியேற்றி நிலத்தடி நீரை மாசு படுத்தும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளி, நியாயவிலைக் கடை, பொதுக் கழிப்பிடம், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பொதுக் கட்டிடங்களை முறையாக பராமரிக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை விளக்கி த.புரட்சி நாதன், உடுமலை ஒன்றியச் செயலா ளர் கி.கனகராஜ் ஆகியோர் பேசினார். தொடர்ந்து குரல்குட்டை நெசவா ளர்பகுதி, குரல்குட்டை பகத்சிங் திடல், மடத்தூர், மடத்தூர் தெற்கு பகுதி, முருக் கத்தி பள்ளம், மலையாண்டிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய் யப்பட்டது. இதில் சிஐடியு நிர்வாகி வெ. ரங்கநாதன், மார்க்சிஸ்ட் கட்சியின் கமிட்டி உறுப்பினர்கள் எஸ்.ஜெகதீசன், கே.முருகவேல், குமரகுரு மற்றும் இந் திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் ஆ.ராமசாமி, கமிட்டி உறுப்பி னர் மாசானி, கருப்புசாமி ஆகியோர் பேசினர். இதில் கிளை உறுப்பினர்கள் மற்றும் பகத்சிங் தப்பாட்ட கலைக் குழுவினர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற் றனர். நிறைவாக மகேந்திரன் நன்றி கூறி னார்.