districts

ஜனநாயகப் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பதா? காவல் துறைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி?

தருமபுரி, ஜூன் 24- ஜனநாயகப் போராட்டங்க ளுக்கு தொடர்ந்து அனுமதி மறுத்து வரும் தருமபுரி மாவட்ட காவல் துறைக்கு மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் ஏ.குமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது, தருமபுரி மாவட் டத்தில் சமீப காலமாக ஜனநாயக முறைப்படி நடைபெறும் ஆர்ப் பாட்டங்களுக்கு காவல் துறை  அனுமதி மறுப்பது வாடிக்கை யாக உள்ளது. பாலக்கோடு அரு கிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாநில அரசின் வழி காட்டுதலுக்குப் புறம்பான இச் செயலைக் கண்டித்து சமூக நல்லி ணக்க மேடை சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம், தொப் பூர் பகுதியில் தலித் இளைஞர் கள் மீது நடைபெற்ற தாக்குத லைக் கண்டித்து மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம், ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஆகியவற்றுக்கு அனுமதி மறுத்து கட்சியின் மாவட்டக்குழு அலுவ லகத்தில் காவல்துறை சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்த  ஆர்ப்பாட்டங்களால் சட்டம் -  ஒழுங்கு பாதிக்கப்படும் என்று  அனு மதி மறுக்கப்படுவதாக காவல் துறை நோட்டீசில் குறிப்பிடப்பட் டுள்ளது.

கடந்த ஆட்சியில் கொரோனா வைக் காரணம் காட்டி மக்களுக் காக ஆர்ப்பாட்டங்களுக்கு அனு மதி மறுக்கப்பட்டது. தற்போது  பொருத்தமற்ற காரணங்களைக் கூறி அனுமதி மறுக்கப்படுகிறது. ஆட்சி மாறினாலும் காவல்துறை யின் காட்சி மாறவில்லை என்ப தையே இது காட்டுகிறது. ஜனநா யக ரீதியாக நடைபெறும் போராட் டங்களைத் தடை செய்வது அரசி யல் சாசனம் வழங்கியுள்ள அடிப் படை உரிமையைப் பறிப்பதாகும். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய போக்கைக் காவல் துறை கைவிட வேண்டும் என  மார்க்சிஸ்ட் கட்சியின் தருமபுரி  மாவட்டக்குழு வலியுறுத்தியுள் ளது.

மக்கள் கோரிக்கை மாநாடு

காவிரியின் குறுக்கே மேக தாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சி களை மேற்கொண்டு வருகிறது. இந்த அணை கட்டும் திட்டத்தி னால் காவிரி டெல்டா விவசாயம் முற்றிலும் அழிந்து போகும். காவிரி நீரை குடிநீருக்காக நம்பி இருக்கும் 28 மாவட்டங்கள் பெரு மளவுக்கு பாதிக்கப்படும். எனவே,  காவிரியின் குறுக்கே மேகதாது வில் அணை கட்டும் முயற்சியைக்  கர்நாடக அரசு கைவிட வேண்டும். ஒன்றிய அரசு இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி யும், மக்கள் கோரிக்கைகளை முன்வைத்தும் வரும் ஜூலை 22 ஆம் தேதியன்று தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. நீராதார மேம் பாட்டுத் திட்டங்களை நிறைவேற் றிட, மாவட்டத்தை தொழில் மய மாக்கிட வலியுறுத்தி நடைபெறும் இம்மாநாட்டில், சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர், என்றார்.