சேலம், பிப்.13- மின் இணைப்பு வழங்க மறுக்கும் மின்சார வாரியத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பனமரத்துப்பட்டி மின்சார வாரிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியம் சிங்கா ரத்தோப்பு பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியி ருக்கும் மக்களுக்கு மின்சார வசதி செய்யப்பட்டுள்ள நிலை யில் தற்போது புதிய இணைப்புகள் வழங்க மின்சார வாரி யம் மருத்து வருகிறது. இது சம்பந்தமாக பனமரத்துப்பட்டி மின் துறை அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் மின் இணைப்புகள் வழங்க மருத்துவ வருகின்றனர். இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிங்காரதோப்பு கிளை செயலாளர் எஸ்.லட்சுமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி. ராமமூர்த்தி, பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் கே.சுரேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். இதில், பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு உறுப்பினர்கள் சிங் காரத்தோப்பு கிளை உறுப்பினர்கள் திரளானோர் பங் கேற்றனர்.