திருப்பூர், ஏப்.12- திருப்பூர் மாநகரத்தின் பொது சுகாதா ரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில், மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட திடக்கழிவு மேலாண்மையை தனியார்மயமாக்கும் நடவ டிக்கையை கைவிட வேண்டும் என மார்க் சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழுவின் சார் பில், மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண் ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது, திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், இந்நகரின் 60 வார்டு களிலும் திடக்கழிவு மேலாண்மை பணியை முழுமையாக தனியாருக்கு தாரைவார்க்கும் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது, மாநகரின் பொது சுகாதாரம் பேணுவதற்கும், மக்கள் நலனுக்கும் எதிரானதாகும். ஏற்கனவே இரண்டு மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மை பணி தனியாரிடம் வழங்கப்பட்டபோதே, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. திடக் கழிவு மேலாண்மையில் தனியார்மயம் என் பது, பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்கு உதவாது, லஞ்ச ஊழலுக்கு வழிவகுக்கும், தூய்மை பணியாளர்களின் சட்ட உரிமைகள் பறிக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சி சுட் டிக்காட்டியது. இவை அனைத்தும் உண்மை என்று நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட்டுள் ளது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் குப்பை கள் முறையான காலத்தில் அப்புறப்படுத்தப் படாமல் தேங்கியிருப்பதும், அதனால் சுகா தார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் நோய் தாக்கு தலுக்கு ஆளாவதும், பொதுமக்கள் நலன் பாதிக்கப்படுவதும், தனியார் ஒப்பந்ததாரரி டம் வேலை செய்யும் தூய்மை பணியாளர் களின் சட்ட உரிமைகள் மறுக்கப்படுவதும் நடைபெற்று வருகிறது.
அதேசமயம் கொரோனா பெருந்தொற்று காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் தூய்மை பணியாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து முன் களப்பணி செய்தது குறிப்பிடத் தக்க மகத்தான பணியாகும். இந்த அனுப வத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், மாநில அரசின் கொள்கை முடிவு என்ற அடிப் படையில் திருப்பூர் மாநகரத்தில் திடக்கழிவு மேலாண்மையில் தனியார்மயத்தை திணிப் பது மக்களின் ஆரோக்கியம், பொது சுகாதார கட்டமைப்பை முற்றிலும் சீர்குலைக்கும் நட வடிக்கையாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உள் ளாட்சி நிர்வாகம், குடிநீர் விநியோகம், குப்பை அகற்றம், கழிவு நீர் வடிகால் சுத்தம் செய்வது, தெரு விளக்கு பராமரிப்பு உள்ளிட்ட பொதுப் பணிகளை செய்வதற்கு கடமைப்பட்டதாக உள்ளது. நூற்றாண்டு காலமாக நிரூபிக்கப் பட்ட இந்த மக்கள் நலன் காக்கும் நடைமுறை, தற்போது தாராளமய காலகட்டத்தில் ஒவ் வொன்றாக கைவிடப்படுகிறது. அந்த அடிப் படையிலேயே, ஆண்டுக்கு ரூ.96 கோடியே 25 லட்சம் மக்களின் வரிப்பணத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்கிட தீர்மானிக்கப்பட் டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு எத் தனை நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் விதித் தாலும், அவை லாப நோக்கத்தை முதன்மை யாகக் கொண்டு செயல்படுவர். பொதுநல நோக்கத்தை பின்னுக்குத் தள்ளி விடுவார் கள் என்பதே அனுபவ உண்மை. மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த முடிவு, மக்கள் தலையில் சுமையை ஏற்ற கூடிய தாகவும் மாறிவிடும். எனவே, திடக்கழிவு மேலாண்மையில் தனியார்மயம் என்ற பல் வேறு குளறுபடிகளுக்கு வழி வகுக்கக் கூடிய இம்முடிவை மாநகராட்சி நிர்வாகம் முற்றிலு மாக கைவிட வேண்டும். அதற்கு மாறாக, மாந கரின் தேவைக்கு ஏற்ப கூடுதல் தூய்மை பணி யாளர்களை நிரந்தர அடிப்படையில் பணி நியமனம் செய்து திடக்கழிவு மேலாண்மை கழிவு நீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட பொது சுகா தாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.