இளம்பிள்ளை, மார்ச் 3- ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியிருப்பதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. உடன டியாக சீரமைக்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட சேனைப்பாளை யம் ஊராட்சியில் சுமார் 500 குடும் பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி யில் விசைத்தறி தொழில் பிரதானமாக செய்து வருகின்றனர். தொழிலுக்கு தேவையான மூலப் பொருட்கள் வாங்கு வதற்கு வேம்படிதாளம், இளம் பிள்ளை, சேலம் உள்ளிட்ட பகுதிக ளுக்கு அய்யம்பாளையம் அருகில் உள்ள ரயில்வே சுரங்கபாதை வழியாக செல்ல வேண்டும். இந்த வழியாக செங் கோடம்பாளையம், ஆர்.புதுப்பாளை யம், ராக்கிப்பட்டி, கடத்தூர், சேர்வாம் பளையம் ஆகிய ஊர்களில் இருந்து இந்த வழிதான் பிரதானமாக இருந்து வருகிறது. இந்த ரயில்வே பாலம் அரு கில் பல மாதங்களாக மழைநீர் அதிக ளவில் தேங்கி இருப்பதால், இந்த வழியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மாற்றுப்பாதை வழியாக சுமார் 6 கிலோ மீட்டர் சுற்றி போகும் நிலை உள்ளது. இது பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக் கும் பெரும் அவதியை ஏற்படுத்து கிறது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் ரயில்வே தண்டவாளத்தை ஆபத்தான நிலையில் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், இப் பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க கோரியும், நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் ரயில்வே தரைவழிப்பாலத்தை புதி தாக அமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது.