districts

img

ஆதிதிராவிட மக்கள் வழிபாட்டு உரிமையை உறுதி செய்திடுக

சேலம், பிப்.1- திருமலைகிரி பெரியமாரியம்மன் கோவிலுக்குள் மாவட்ட ஆட்சியர், ஆதிதிராவிட மக்களை அழைத்துச் சென்று அவர்களின் வழிபாட்டு உரி மையை உறுதி செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தியுள்ளது. இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கட்சி யின் சேலம் மாவட்ட தலைவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: சேலம் மாவட்டம், திருமலைகிரி பெரிய மாரியம்மன் கோவிலுக்குள் தலித் இளைஞன் பிரவீன்குமார் என் பவர், கோவில் கருவறை முன்பு நின்று சாமி தரிசனம் செய்ய வேண் டும் என கூறியதற்கு, திமுக சேலம் ஒன்றிய செயலாளரும், திருமலை கிரி ஊராட்சி மன்ற தலைவருமான மாணிக்கம் என்பவர், பிரவீன்கு மாரை அவரது பெற்றோர் முன்னி லையில் கடுமையான சொற்களால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள் ளார். இச்சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட திருமலைகிரி பகுதியில் தொடர்ந்து சாதிய வன்மத்தோடு தொடர்ந்து தலித் மக்களுக்கு எதிராக பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  செவ்வாயன்று சேலம் மாவட்ட ஆட்சி யரிடம் நேரில் மனு அளிக்கப்பட் டது. மேலும், இந்து சமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சம்பந்தப்பட்ட கோவிலுக்குள் அப் பகுதியில் உள்ள தலித் மக்களை அழைத்து சென்று, அவர்களின் வழி பாட்டு உரிமையை மாவட்ட ஆட்சியர்  தலைமையிலான அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங் கடபதி, எம்.குணசேகரன், பொன்.ரமணி, வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆர்.குழந்தைவேல் ஆகியோர் பங் கேற்றனர்.