திருப்பூர், டிச. 21 - பொது விநியோக முறையில் வழங்கப் படும் உணவு தானியப் பொருட்களை தர மான முறையில் வழங்குமாறு மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செய லாளர் செ.முத்துக்கண்ணன் மாவட்ட ஆட்சி யருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, செ.முத்துகண்ணன் அனுப் பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி, 60 ஆவது வார்டு இந்திரா காலனி, முத்தனம்பாளையம் கே.103 பொது விநியோக கடையில் டிசம்பர் 21 அன்று ரேசன் பொருட்கள் பெறுவதற்கு சென்று அங்கு வழங்கப்படும் பொருட்கள் குறித்து கேட்டறிந்தோம்.கோதுமை இருப்பில் இல்லை. இந்த மாதத்திற்கான இருப்பு தீர்ந்து விட்டது என கடை ஊழியர் தெரிவித்தார். அப் போது லாரியில் இருந்து மூட்டை மூட்டை யாக கோதுமை, அரிசி உள்ளிட்ட பொருட் கள் கடைக்குள் இறக்கி வைக்கப்பட்டது.
அது குறித்து கேட்டபோது அது அடுத்த மாதத்திற் கான இருப்பு, அதை வழங்க முடியாது என தெரிவித்தார். இந்த மாதம் உணவு தானியங்கள் கடைக ளில் வாங்குவதற்கு வரும் பயனாளிகளுக்கு, அது அடுத்த மாதத்திற்கு என்று சொல்வது, ஏமாற்றத்துடன் அரசை குறை கூறும் நிலைக்கே தள்ளப்படுவர். இதனால் அரசின் திட்டங்களை முழுமையாக நடைமுறைப்ப டுத்துவதாகத் தெரியவில்லை. சம்பந்தப் பட்ட வழங்கல் துறை அதிகாரிகள் மெத்தன மாக இருப்பதாக அறிகிறேன். சிவில் சப்ளை மற்றும் கூட்டுறவு துறை செயல்பாட்டில் உள் ளதா? என்று கேள்வி எழுப்பும் வகையில் உள் ளது. மேலும் இந்த மாதம் வழங்கப்பட்ட பச்ச ரிசி முழுமையாக புழுக்கள் கூடு கட்டிய அரிசி யாக, உணவிற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே பொது விநியோக முறைக்கு வழங்கப்படும் அரிசிகள் உணவு கிடங்குகளில் பரிசோதிக் கப்பட்டு அனுப்ப வேண்டும், என கடந்த 2021 செப்டம்பரில் ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் சிவில் சப்ளை மற்றும் கூட்டுறவு துறை இதில் கவனம் செலுத்தியதாக தெரிய வில்லை. சாதாரண ஏழை,எளிய மக்கள் பய னுறும் வகையில் ரேசன் கடைகளில் பொருட் கள் வழங்க, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கி றோம். மோசமான பொருட்கள் தொடரும் பட் சத்தில் கூட்டுறவு மற்றும் சிவில் சப்ளை நிர்வா கத்தை கண்டித்து போராட்டம் நடத்த வேண் டிய கட்டாயம் ஏற்படும் என்று செ.முத்துக் கண்ணன் கூறியுள்ளார்.