பென்னாகரம், ஆக.9- காவிரி உபரிநீரை தருமபுரி ஏரிகளில் நிரப்ப வலியு றுத்தி நடைபயணம் குறித்த பிரச்சார இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்றது. காவிரி ஆற்றின் உபரி நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நிரப்ப வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் ஆக. 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடை பயணம் மேற்கொள்ள உள்ளன. இந்த நடைபயணத் தின் நோக்கங்களை விளக்கும் வகையில், தருமபுரி மாவட் டத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பென்னாகரம் கிழக்கு ஒன்றிய குழுவின் சார்பில் பெரும் பாலை முதல் பெரிய கடமடை வரை பல்வேறு கிராமங்களில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில், கட்சியின் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜி.சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அ.குமார், மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள் வி.மாதன், இரா.சிசுபாலன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் ஆ.ஜீவானந்தம், கே.அன்பு, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பி.சக்கரைவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல், பென்னாகரம் பகுதி குழுவின் சார்பில் நடை பெற்ற பிரச்சார இயக்கத்திற்கு கட்சியின் பகுதி குழுச் செய லாளர் வி.ரவி தலைமை வகித்தார் இதில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் வி. மதன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆ. ஜீவானந்தம், கே.அன்பு, சுதா மாதர் சங்க மாவட்டச் பொரு ளாளர் சுதா, வளர்மதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இப்பிரச்சார இயக்கம் மடம் கிராமத்தில் துவங்கி கூந்தப் பாடி, பொச்சாரம் பட்டி, நாகனூர், மாங்கரை மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.