districts

ஒகேனக்கல் குடிநீர் திட்டப்பணிக்கு நிதி ஒதுக்கீடு

தருமபுரி, பிப்.20- தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறி விக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை யில், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், 2 ஆம் கட்டப் பணிகளுக்கு  ரூ.7890 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித் துள்ளது. இதுகுறித்து சிபிஎம் தருமபுரி  மாவட்டச் செயலாளர் ஏ.குமார் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ் நாடு சட்டமன்றத்தில் நிதியமைச்சர் இவ்வாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இந்த அறிக்கையில், தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட் டப்பணிகளுக்கு 7890 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. குடிநீர் பிரச்ச னைக்கு நிரந்தரத்தீர்வு காண நிறை வேற்றப்படவுள்ள இத்திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வர வேற்கிறது. உடனடியாக இப்ப ணிகளை தொடங்க வேண்டும் என சிபிஎம் தருமபுரி மாவட்டக்குழு வலியுறுத்துகிறது. காவிரி உபரிநீர் திட்டம்? அதேசமயம் காவிரி உபரிநீர் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய் யப்படவில்லை. வானம் பார்த்த பூமியைக் கொண்டுள்ள இம்மா வட்டத்தின் மேட்டு நில விவசா யத்தைக் காப்பாற்றவும், நிலத்தடி நீர்மட்டத்தைப் பெருக்கவும் மழைக்காலங்களில் காவிரி ஆற் றில் உபரியாக செல்லும் நீரை மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிக ளில் நிரப்ப வேண்டும் என மாவட்ட மக்கள் தொடர்ந்து வலி யுறுத்தி வருகின்றனர். இக்கோ ரிக்கையை வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  கோரிக்கை மாநாடு, நடைபய ணம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை யில் இத்திட்டம் இடம் பெற வில்லை. உடனடியாக இத்திட் டத்தை நிறைவேற்ற தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். பொய் வழக்கு மாவட்டத்தில் பல இடங்களில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழி யர்கள் மீது காவல்துறை பொய் வழக்கு தொடுத்து வருகிறது. கடந்த வாரம் பாலக்கோடு வட்டம், தொட்டாதார அள்ளியைச் சேர்ந்த கட்சிக் கிளைச் செயலாளர் துரையை காவல் நிலையத்தில் கடுமையாகத் தாக்கி, பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஏரியூர் ஒன்றி யச் செயலாளர் என்.பி.முருகன் மீது  காவல்துறை பொய் வழக்கு போட் டுள்ளது. இத்தகைய பொய் வழக் குகளை உடனடியாக திரும்பப் பெற மாவட்ட காவல் கண்காணிப் பாளர் நடவடிக்கை எடுக்க வேண் டும். தேர்தல் தயாரிப்புக்கூட்டம் பிப்.21 ஆம் தேதி (இன்று) மாவட்டம் முழுவதும் 100 மையங் களில் சிவப்பு புத்தக தினத்தை ஒட்டி வாசிப்பு இயக்கத்தை மேற் கொள்வது என முடிவு செய்யப் பட்டுள்ளது. மேலும், மார்ச் 2 ஆம்  தேதி தருமபுரி பெரியார் அரங்கில்  மக்களவைத் தேர்தல் தயாரிப்புப்  பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் மாநிலச்  செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்க உள்ளார். இக்கூட்டத்தை  வெற்றிகரமாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.