திருப்பூர், பிப்.2- திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பேரூராட்சியில் இரண்டு வார்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்ட ணியின் ஆதரவு பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களாக ஊத்துக்குளி பேரூராட்சி 6ஆவது வார்டில் கே.எம்.சின்னசாமி, 7ஆவது வார்டில் கே.சரஸ்வதி ஆகி யோர் போட்டியிடுகின்றனர். அவர்கள் புதன்கிழமை ஊத் துக்குளி பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலு வலரிடம் தங்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.