districts

காலமானார்

கோவை, மார்ச் 23- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை தொண்டாமுத்தூர் ஒன்றி யம், வீரகேரளம் பகுதி மூத்த தோழர் ஆர்.கோபால் காலமானார். அவருக்கு வயது 87.  கோவை காட்டூர் பகு தியில் இயங்கிய மோட்டார் தொழிற்சாலையில் பணி யாற்றியபோது சிஐடியு தொழிற்சங்கத்தால் ஈர்க்கப்பட்டு சுமார் 50 ஆண்டுக ளுக்கும் மேலாக சிஐடியு மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் தீவிர ஊழியராக செயல்பட்டு வந்தவர் ஆர்.கோபால். வீரகேரளம் வட்டாரத்தில் பொதுமக்களின் அடிப்படை  பிரச்சனைகள் தொடர்பாக இடைவிடாது போராட்டங் களை முன்னின்று நடத்தியவர். மார்க்சிஸ்ட் கட்சியின் வீரகேரளம் கிளை செயலாளராக நீண்ட காலம் திறன் பட செயல்பட்டதுடன், தீக்கதிரின் தீவிர வாசிப்பாளரா கவும். கட்சி பிரசுரங்களை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்வதிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல் பட்டவர்.  இந்நிலையில் கடந்த செவ்வாயன்று மாலை திடீர் மாரடைப்பால் கோபால் காலமானார். இவரது இறுதி நிகழ்ச்சி புதனன்று பொம்மனம்பாளை யம் மின்மாயனத்தில் நடைபெற்றது. இதில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்ம நாபன், மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் என்.ஜெய பாலன், தீக்கதிர் கோவை பதிப்பின் பொதுமேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம், தொண்டாமுத்தார் ஒன்றிய செய லாளர் வி.மணி, என்.ஆறுச்சாமி உள்ளிட்டோர் மறைந்த தோழரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி னர்.