districts

img

மழையால் சீர்குலைந்த சந்தை

ஈரோடு, செப். 26- ஈரேட்டில் திங்களன்று மாலை பெய்த மழையால் காய்கறி  சந்தை சீர்குலைந்து, வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு, சாஸ்திரி நகரில் திங்களன்று மாலை பெய்த  கன மழையால் காய்கறி சந்தை சீர் குலைந்து காணப்படு கிறது. இதனால் சுமார் 100க்கும் மேற்பட்ட சிறு வியாபாரி கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள் மழை வெள்ளத்தில் அடித்து  செல்லப்பட்டன. மழை வடிகாலில் குப்பைகளை வடிகட்ட குறுக்காக வைக்கப்பட்ட இரும்பு தட்டுகளில் குப்பைகள் சிக்கியதால் மழைநீர் தேங்கி வெள்ளப்பெருக்கிற்கு காரண மாக அமைந்து விட்டது. வருவாய்த்துறையும் உள்ளாட்சி அமைப்பும் தங்களுக்கு உதவ வருவார்கள் என பாதிக்கப் பட்ட சிறு வியாபாரிகள் காத்து கிடக்கின்றனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், காசி பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் கே.துரைராஜ், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் க.ராஜ் குமார் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல்  தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கழிவுநீர் பாதையில் உள்ள  தடுப்புகளை நீக்கி மழை வெள்ளம் வடிய ஆவண செய்யும் படி மாநகராட்சி உதவி ஆணையர் மற்றும் ஈரோடு வட்டாட் சியர் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.