அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பாரம்பரியமான பல தொழில்கள் அழிந்து வருகிறது. அந்த வரிசையில் சுண்ணாம்பு உற்பத்தி செய்யும் சுண்ணாம்பு காளவாய்கள் அழிவின் விழிம்பிற்கே சென்று விட்டது. இதை நம்பி இருந்த ஏராள மான குடும்பத்தை சேர்ந்த தொழிலா ளர்கள் கிடைக்கும் கூலி வேலை களுக்கு சென்று வருகின்றனர். ஒருகாலத்தில் பொங்கல் பண் டிகை என்றாலே பொங்கல், கரும்பு வரிசையில் வெள்ளையடிப்பதற்கு சுண்ணாம்பும் நினைவுக்கு வரும். சுண்ணாம்பு உற்பத்தி செய்வதற் காகவே ஒவ்வொரு ஊரிலும் சுண்ணாம்பு காளவாய்கள் இருக்கும். சுண்ணாம்பு உற்பத்தி செய்வதற்கு முதல்படியாக ஓடையில் இருந்து தகுந்த கற்களை தேடி எடுத்து வந்து அதை சிறு சிறு கற்களாக உடைத்து பின்னர் சிறு கூடைகளில் அள்ளி 10 அடி உயரமுள்ள காளவாய் எனப் படும் மண்ணால் கட்டப்பட்ட தொட்டி போன்ற அமைப்பில் போடுவார்கள். பின்னர் ஒருநாள் முழுவதும் தொட்டி யின் அடியில் விறகு மூலம் தீவைத்து நெருப்பு மூட்டி ஆறவைத்தால் ஒடைக்கல் சுண்ணாம்பு கல்லாக மாறிவிடும்.
ஆனால் தற்போது, தொழில் நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி யால், பரிணாம வளர்ச்சியாக சுண் ணாம்பின் தேவையில் இருந்து விலகி, டிஸ்டம்பர், எமர்சன் என விதவிதமான வண்ணங்களில் பெயிண்ட் போன்ற பல்வேறு பொருட்களின் வரவால் சுண்ணாம்பு உற்பத்தி தொழில் அழிவின் விழிம்பிற்கே சென்று விட்டது. தற்போது, அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில காளவாய் கள் மட்டுமே சுண்ணாம்பு உற்பத்தி செய்யும் நிலை உருவாகிவிட்டது. தாராபுரம் வட்டாரத்தில் உப்பு துறைபாளையம், சங்கர் மில்தெரு, பலிஜிவார் தெரு, வரப்பாளையம், அலங்கியம் உள்ளிட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட சுண்ணாம்பு உற் பத்தி செய்யும் காளவாய்கள் இருந்தன. சுண்ணாம்பிற்கு போதிய தேவையில்லாததால் காலப் போக்கில் சுண்ணாம்பு காளவாய்கள் காட்சி பொருளாகிவிட்ட நிலையில் தற்போது உப்புதுறைபாளையத்தில் மட்டும் ஒரே ஒரு சுண்ணாம்பு காள வாய் இயங்கிவருகிறது.
இதுகுறித்து 50 ஆண்டுகளாக இத் தொழிலில் ஈடுபட்டுள்ள சுப்பிரமணி என்பவர் தெரிவிக்கையில், 15 வருடங் களுக்கு முன்பு வரை நாள்தோறும் 10 பேர் வேலை செய்து வந்தனர். உற் பத்தி செய்யப்படும் சுண்ணாம்பு, கட்டு மானம் மற்றும் பல்வேறு தேவை களுக்கு உடனுக்குடன் விற்றுவிடும். ஆனால் சிமெண்ட், டிஸ்டம்பர் வந்த பிறகு இரண்டுபேர் மட்டுமே வேலை செய்து வருகிறோம். அதுவும் கூட மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே உற்பத்தி செய்யும் நிலை உள்ளது. மற்ற நாட்களில் கட்டிட வேலைக்கு சென்று வருகிறோம். நாங்கள் உற் பத்தி செய்யும் சுண்ணாம்பும் உடனடி யாக விற்கமுடியவில்லை. சிறிய அளவில் கட்டுமான வேலைகளான கான்கிரீட் தளங்களில் சுருக்கி போடு வதற்கும், பட்டுப்புழு, கோழிப்பண் ணைகளுக்கு கிருமிநாசினியாகவும், விவசாயத்திற்கு உரமாகவும், சித்த மருத்துவர்கள் மருந்து பொருள் தயா ரிக்கவும் வாங்கி செல்கின்றனர். அழியும் நிலைக்கு சென்று விட்ட சுண்ணாம்பு தொழிலுக்கு மாற்றான தொழில் நடத்த அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத் தார். -ஆர்.ராஜா, தாராபுரம்