districts

img

மாமேதை லெனின் நினைவு நூற்றாண்டு ஓவியப் போட்டி

திருப்பூர், ஜன.25- மாமேதை லெனின் நினைவு நூற் றாண்டை முன்னிட்டு வேலம்பாளையத்தில் வியாழனன்று 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு லெனின் உருவ படம் பார்த்து வரையும் ஓவிய போட்டி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரக்குழு சார்பில் நடை பெற்ற ஓவியப் போட்டிக்கு கிளைச் செயலா ளர் எம்.வெள்ளியங்கிரி தலைமை ஏற்றார். மாமேதை லெனின் குறித்து ஆசிரியர் ராம மூர்த்தி பேசினார். ஓவியர் சாஜகான் ஓவிய  போட்டியை துவக்கி வைத்தார். இதில் 50க் கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற் றனர். இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக்குழு செயலாளர் ச.நந்தகோ பால், கிளைச் செயலாளர்கள் சி.வசந்தி, மூத்த  நிர்வாகி என்.சுப்பிரமணி, பாலர் சங்க நிர்வாகி  தினேஷ் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து  கொண்டனர்.