18ஆவது மக்களவைத் தேர்தலை ஒட்டி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சப் டிவிஷன்களுக்கு உட்பட்ட ஆண், பெண் காவ லர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 493 பேர் ஞாயிறன்று வாக்குப்பதிவு செய்தனர். பொள்ளாச்சி லாரி அசோசியன் மண்ட பத்தில், துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் காவலர்கள் தங்கள் வாக்குகளை அளித்தனர். இன்றும் (திங்கள் கிழமை) காவலர்கள் வாக்கு செலுத்த உள்ளனர்.