தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்க ராசிபுரம் கிளை தொடக்க விழா ராசிபுரத்தில் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.ஜெயபால், நாமக்கல் மாவட்டத் தலைவர் எம்.சந்திரன், செயலாளர் ஏ.குழந்தைவேல், பொரு ளாளர் கே.புள்ளியப்பன் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக, ராசிபுரம் நகர மன்றத் தலைவர் முனைவர் ஆர்.கவிதா சங்கர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத் தார்.