districts

img

மேச்சேரி: டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் முறையீடு

சேலம், பிப்.18- மேச்சேரி அருகே புதிதாக மதுக் கடை அமைக்க கடும் எதிர்ப்பு தெரி வித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள தெத்திகிரிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆரிக்கவுண்டனூ ரில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்புகள் அருகே புதிதாக மதுக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர். இந்நிலையில், மேச்சேரி ஊராட்சி ஒன்றியக்குழு  துணைத்தலைவர் பழனிசாமி தலை மையில், ஆரிக்கவுண்டனூர் கிராமத் தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பொது மக்கள், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது,  அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த  காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஒரு சில  நபர்களை மட்டும் ஆட்சியரை சந் தித்து மனு அளிக்க அனுமதித்தனர். இதையடுத்து ஆட்சியர் செ.கார் மேகத்திடம் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது, மேச்சேரி அருகே தெத் திகிரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆரிக்கவுண்டனூரில் பள்ளிக்கூடம், கோவில், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் புதிதாக மதுக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து ஏற்கனவே அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக் கையும் எடுக்கவில்லை. இதற்கி டையே தற்போது மதுக்கடை அமைப் பதற்கு கட்டுமான பணிகள் நடந்து வரு கிறது. ஏற்கனவே, கடந்த 2017 ஆம் ஆண்டு மதுக்கடை இயங்கியபோது, சிலர் மது அருந்திவிட்டு பள்ளி மாண விகளுக்கு இடையூறு ஏற்படுத்திய தால் ஊர் பொதுமக்கள் போராட்டம் நடத்தி, அந்த மதுக்கடை அகற்றப் பட்டது. தற்போது மீண்டும் கிராமத்தில் மதுக்கடை அமைக்கப்பட்டால் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம். எனவே, புதிய மதுக்கடை அமைக்கும் முடிவை டாஸ்மாக் நிர்வாகம் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. இதேபோல், தெத்திகிரிப்பட்டி ஊராட்சியில் புதிதாக மதுக்கடை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ.சதாசிவ மும், மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகத் திற்கு கடிதம் அனுப்பியுள்ளார் என் பது குறிப்பிடத்தக்கது.