districts

img

சிபிஎம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலாளராக எம்.மோகன்ராஜ் தேர்வு

கோவை, டிச.2- மார்க்சிஸ்ட் கட்சியின் பெரி யநாயக்கன்பாளையம் ஒன்றி யக் குழு செயலாளராக எம்.மோகன்ராஜ் தேர்வு செய்யப் பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் கோவை மாவட்டம், பெரி யநாயக்கன்பாளையம் ஒன்றியக் குழு 24 ஆவது மாநாடு தொப்பம்பட்டி பகுதி யில் உள்ள தனியார் அரங்கில் ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட்டின், துவக்கத் தில் தேவராஜ் செங்கொடியை ஏற்றி வைத் தார். ஒன்றியக் குழு நிர்வாகி சிவராஜன்  தலைமை வகித்தார். மாநில செயற்குழு  உறுப்பினர் ஏ. குணசேகரன் துவக்கவுரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் சி.பத்மநா பன் மாநாட்டை வாழ்த்தி பேசினார். இம்மாநாட்டில், பெரியநாயக்கன்பாளை யத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி யுள்ள பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்களின் பாது காப்புக்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட் டாரத்தில் ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் முயற்சியை கைவிட்டு, ஊராட்சிகளுக்கு கூடுதல் நிதி  ஒதுக்க வேண்டும். தடாகம் பகு தியில் செயல்படும் செங்கல்  சூளை தொழிலாளர்களின் வாழ் வாதார பாதுகாப்புக்கு உரிய நட வடிக்கை எடுக்க ேண்டும். சிறு, குறு தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும்.  மாதாந்திர மின் கணக்கீட்டு முறையை உடனடியாக அமல் படுத்த வேண்டும். மேட்டுப்பாளையம் - கோவை இடையே இரயில் போக்குவரத்தை இருவழிப்பாதையாக மாற்ற வேண்டும்.  பெரியநாயக்கன்பாளையம் மேட்டுப்பாளை யம் சாலையில் உள்ள உயர்மட்ட மேம்பால  பணிகள் முடிக்கப்படாததால் ஏற்படும் பிரச் சனைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. இதனை தொடர்ந்து, பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியக் குழு செயலாளராக எம். மோகன்ராஜ் மற்றும் 13 பேர் கொண்ட ஒன் றியக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜய்குமார் நிறையுரையாற்றினார்.