பொள்ளாச்சி, அக்.20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் பொள்ளாச்சி தாலுகாச் செயலாளராக எம்.அன்பரசன் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் பொள்ளாச்சி தாலுகா 12 ஆவது மாநாடு, ஏடிஎஸ்சி தியேட் டர் அருகிலுள்ள வங்கி ஊழியர் சங்க கட்டிடத்தில், தோழர்கள் சீத்தாராம் யெச்சூரி மற்றும் சங்கரய்யா ஆகியோரது நினைவரங்கில் ஞாயிறன்று நடைபெற்றது. மூத்த தோழர் பி.ஆறுமுகம் செங்கொடியை ஏற்றி வைத்தார். கே.மகாலிங்கம், எம்.அங்கமுத்து, டி.விஜயா ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ் துவக்கவுரை யாற்றினார். அறிக்கையை தாலுகாச் செய லாளர் எம்.அன்பரசன் முன்வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ஆறுச் சாமி வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டில், கோவையை தலைமையிடமாக கொண்டு, பொள்ளாச்சி ரயில் நிலை யத்தை உள்ளடக்கிய புதிய ரயில்வே கோட்டத்தை உரு வாக்க வேண்டும். பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன்பதிவு மையத்தை மீண்டும் திறக்க வேண்டும். திருவள்ளுவர் திட லில் அரசியல் கட்சிகள் மற்றும் வெகுஜன அமைப்புகள் போராட்டம் நடத்துவதற்கு இடம் ஒதுக்கி தரவேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து கட்சியின் பொள் ளாச்சி தாலுகாச் செயலாளராக எம்.அன்பர சன் மற்றும் 11 தாலுகாக்குழு உறுப்பினர் கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஆர்.பழனிசாமி நிறைவுரையாற்றினார்.