திருப்பூர், ஏப். 28 - திருப்பூர் நகரின் மையப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த கும ரன் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி மோதியதில் ஒருவர் சம் பவ இடத்திலேயே உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். திருப்பூர் மாநகரின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதியை இணைக்கக்கூடிய மிகவும் முக்கியமான சாலை குமரன் சாலை. இதில் எப்போதும் போக்குவ ரத்து நெரிசலாக காணப்படும். இந்த சாலையில் கனரக வாகனங்கள் வருவ தற்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட் டுள்ளது. இதனிடையே குமரன் சாலையில் வெள்ளியன்று மதியம், விறகு பாரம் ஏற்றி வந்த லாரியை மதுரையைச் சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டி வந் தார். அந்த லாரியில் அளவுக்கு அதிக மான பாரம் இருந்த நிலையில், பிரேக் பிடிக்க முடியாமல், கட்டுப்பாடை இழந்து அப்பகுதிகளில் நிறுத்தப்பட்டி ருந்த 15 இருசக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு கார்கள் மீது மோதி விபத்து ஏற் படுத்தியது. இந்த விபத்தில் இருசக்கர வாக னத்தில் வந்த ஒருவர் உடல் நசுங்கி சம் பவ இடத்திலேயே உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த மூன்று பேரும் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து போலீசார் லாரி ஓட்டு நர் முருகனை கைது செய்தனர். போலீ சார் விசாரணை மேற்கொண்டு உயிரி ழந்தவர் திருப்பூர் காங்கேயம் சாலை பகுதியைச் சேர்ந்த கோயில் பூசாரி கண் ணன் என்று கண்டறிந்தனர். அதிக போக்குவரத்து நெருக்கடி இருக்கக்கூடிய பகுதியில் பகல் நேரத் தில் ஏற்பட்ட இந்த விபத்து வாகன ஒட்டி கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள் ளது.