districts

உருக்கு ஆலை கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்

திருப்பூர், மே 21- திருப்பூரில், இரும்பு உருக்காலை கழிவுகளை ஏற்றி வந்த லாரிக்கு போக்குவரத்து காவல்துறையினர் அப ராதம் விதித்தனர். மேலும், அனுமதி யின்றி கழிவுகளை கொண்டு வந்த லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருப்பூர் - பெருமாநல்லூர் சாலை, மும்மூர்த்தி நகர் பகுதியில் வாகன எண்  சரியாக தெரியாத நிலையில் வந்த  சரக்கு வாகனத்தில் மர்ம பொருள்  இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள்  சிலர் அதனை சிறைபிடித்து, போக்கு வரத்து காவல் துறையினருக்கு தகவல்  அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் வாகன எண் முறையாக இல்லாததால் வாகனத்திற்கு அபராதம் விதித்தனர். வாகனத்தில் கழிவுப் பொருட்கள் இருந்ததால் உடனடியாக சந்தே கத்தின் பேரில் வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல்  அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த  கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட் டாட்சியர் ஆய்வு செய்ததில் வாகனத் தில் இரும்பு உருக்காலையில் இருந்து  வெளிவந்த கழிவுகள் வைத்திருந்தது தெரியவந்தது.  இந்த கழிவுகளை மும்மூர்த்தி நகர் பகுதியில் உள்ள பாறைக்குழியில் கொட்ட எடுத்து வந்திருந்தனர். இது ஈரோடு சிப்காட் பகுதியில் உள்ள  தொழிற்சாலை கழிவுகள் விசாரணை யில் தெரியவந்தது.  ஆனால், அதற்கான எந்த ஒரு முறை யான ஆவணங்களும் இல்லாமல் கழிவு களை கொண்டு வந்தது தெரிய வந்ததை யடுத்து லாரியை காவல்துறையினர் பறி முதல் செய்தனர்.  வட்டாட்சியரின் புகாரின் பேரில்,  மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் , கழிவுகளை கொண்டு வந்த லாரி யின் ஓட்டுநர் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்திடம் விசாரணை மேற் கொள்ள இருப்பதாக தெரிவித்தனர்.