சேலம், மே 13- நூல் விலை உயர்வை கண் டித்து, எடப்பாடி வட்டாரத்தில் உள்ள விசைத்தறி உரிமையாளர் கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், எடப்பாடி வட் டார அனைத்து விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி கூடங்கள் நடத்துவோர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி யுள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் மே 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக விசைத்தறி யாளர்கள் தெரிவித்துள்ளனர். இப் போராட்டத்தின் காரணமாக ஆயி ரத்திற்கும் மேற்பட்ட நெசவுத் தொழில் கூடங்களில் உற்பத்தி நிறுத் தப்பட்டுள்ளது. இதனால் 50 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் வேலையிழந்து உள்ளனர். இதுகுறித்து எடப்பாடி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகையில், தொடர் நூல் விலையேற்றம் காரண மாக தற்போது விசைத்தறிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற் போது விசைத்தறிக்கு பயன்படுத்தப் படும் 10, 20 மற்றும் 40 ஆம் நம்பர் நூல்களின் விலை 75 சதவிகிதம் அதிகரித்துள்ளது. எனவே, நூல் விலையை குறைக்க தமிழக அரசு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், இந்த வேலைநிறுத்தத்தின் காரணமாக ரூ.10 கோடி மதிப்பிலான வர்த்த கம் பாதிக்கப்பட்டுள்ளது, என்ற னர்.