districts

img

பூட்டிய நிலையில் பொதுக்கழிப்பிடம்

நாமக்கல், ஜன.10- நீண்ட நாட்களாக பூட் டியே கிடக்கும் பள்ளிபாளை யம் நகராட்சி பொதுக்கழிப் பிடத்தை உடனடியாக திறந்து பராமரித்திட வேண் டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் பொதுக்கழிப்பிடம் உள்ளது. இந்த  கழிப்பிடத்தை பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த கடை வியாபாரிகள் என பல்வேறு தரப்பினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலை யில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக இந்த பொதுக் கழிப்பிடம் பூட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள் ளாகி வருகின்றனர். பள்ளிபாளையத்தில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளின் ஒரு பகுதியாக கழிப்பிடம் அருகிலேயே கழிவு நீர் சாக்கடை குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், கழிவறைக்கு செல்லும் நீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே போர்க் கால அடிப்படையில் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணி களின் நலன் கருதி கழிப்பிடத்தை மீண்டும் மக்கள் பயன்பாட் டிற்கு திறந்து, தினந்தோறும் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு நகராட்சி கழிப்பிடத்தை பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.