உதகை, டிச.27- உதகை எச்பிஎப் தொழிற்சாலை வனத் துறைக்கு சொந்தமான இடத்திற்கு மீண்டும் விற்பனை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, வனப்பாதுகாப்பு சட்டத்துக்கு முரணானது என வனத்துறை தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் (எச்பிஎப்) நிறுவனத்தின் மூலம், உற்பத்தி செய்யப்படும் பிலிம், எக்ஸ்ரே பிலிம், போட்டோ பிலிம் ஆகியவைகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வந் தது. கடந்த 1991ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய பொருளாதார கொள்கை காரணமாக, வெளிநாடுகளில் இருந்து பிலிம், எக்ஸ்ரேக்களை இறக்குமதி செய்ய அரசு அனுமதி அளித்ததால் எச்பிஎப் தொழிற் சாலை நலிவடைய தொடங்கியது. இதனால் அந்த தொழிற்சாலை மூடப்பட்டது. எச்பிஎப் தொழிற்சாலை இயங்கி வந்த 291 ஏக்கர் இடம் வனத்துறைக்கு சொந்தமானதாகும். வனத்துறை 99 ஆம் ஆண்டு குத்தகை அடிப் படையில் இந்த இடத்தை ஒன்றிய அரசுக்கு வழங்கி இருந்தது. இதனிடையே எச்பிஎப் நிர்வாகம் திவாலா னதால், வங்கிக்கு தரவேண்டிய கடன் அதிக மானதால், இந்த பிரச்சினை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் விசாரணையில் உள் ளது. இந்நிலையில், தேசிய சட்ட தீர்ப்பாயத் தால் நியமிக்கப்பட்ட விற்பனை முகவர், எச்.எச்.பி.எப். நிர்வாகத்தின் அசையும் அசையா சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கை எடுத் தார்.
இதற்கிடையே, எச்பிஎப் நிறுவன சொத் துக்கள் மற்றும் நிறுவனம் செயல்பட்டு வரும் வனத்துறைக்கு சொந்தமான இடமும் விற் பனை ஏலத்துக்கு உள்ளது என, ஏற்கனவே விளம்பர அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலை யில், மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு குழப் பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட வன அலுவ லர் கவுதம் கூறுகையில், எச்பிஎப் நிறுவனத் திற்கு சொந்தமான சொத்துக்களை மட்டும் தான் அந்த நிர்வாகம் விற்பனை செய்ய முடி யும். இடம் வனத்துறைக்கு சொந்தமானது. அதை விற்பனை செய்ய முடியாது என்று கூறி வனத்துறை சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 12 ஆம் தேதி விசார ணைக்கு வந்தது. அப்போது சட்டத் தீர்ப்பா யம் சார்பில் நியமிக்கப்பட்ட விற்பனை முக வர் சார்பில் ஆஜரான தரப்பினர், “இந்த விற்ப னையில் யாரும் கலந்துகொள்ளவில்லை” என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் என்சி எல்டி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் யும்படி உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கி இருந்தது. இதன்படி என்சிஎல்டி நீதிமன்றத் தில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில், மீண்டும் வெளியிட்ட விற்பனை ஏல அறிவிப்பு, வனப் பாதுகாப்பு சட்டத்துக்கு முரணானது. அந்த சட்டத்தின் சரத்துகளின்படி குற்றவழக்கு பதிய நேரிடும் என வலியுறுத்தி விற்பனை பிரதிநிதிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப் பட்டு உள்ளது, என்றார்.