districts

img

பொதுப்பாதையை ஆக்கிரமித்த வட்டாட்சியர்

சேலம், நவ.15- ஓமலூர் அருகே போலி ஆவணம்  தயாரித்து பொதுப்பாதையை ஆக்கி ரமித்த வட்டாட்சியர் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் பகுதி யில் பொதுமக்கள் 80 ஆண்டு காலம் வழித்தடம் ஒன்றை பயன் படுத்தி வந்தனர். இந்த வழித்தடத்தை  போலி ஆவணங்கள் தயாரித்து வட்டாட்சியர் வல்ல முனியப்பன் என் பவரும், வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம் என்பவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக தனிநபர் ஒருவருக்கு வழங்கியதாக  அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். இதுதொடர்பாக அப் பகுதி மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், திங்களன்று அந்த கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் விடு தலை சிறுத்தைகள் கட்சியினரின் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனையடுத்து பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப் படுத்தினர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கி செல்ல காவல் துறையினர் அனுமதித்தனர்.