ஈரோட்டில் தொலை தொடர்பு நிறுவ னத்தின் குடியிருப்புகள் காலியாக பரா மரிப்பின்றி அவலட்சணமாக காட்சியளிக் கிறது. ஈரோடு, தாராபுரத்தை உள்ளடக்கிய பிஎஸ் என்எல் நிறுவனம் ஈரோடு மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் லேன்ட் லைன் இணைப்புகளைக் கொண்டிருந்தது. அதேபோல பிராட் பேன்ட் சேவைகளும் வழங்கி வந்தது. இதில் சுமார் 1600 அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பணி யாற்றி வந்தனர். இவர்கள் அனைவருக்கு மான குடியிருப்புகள் மூலப்பாளையம் எக் சேஞ்ச் அருகில் கட்டிக் கொடுக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு அடுத்த சில ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. ஏ,பி,சி,டி என நான்கு வகை யான அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டன. இவ்வாறு 3 கட்டங்களாக 1312 வீடுகள் கட் டப்பட்டன. இவற்றில் வருமானத்தின் அடிப் படையில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இவற்றின் வாடகை என்பது ஆரம்பத்தில் சில நூறு களில் மட்டும் இருந்தது. பின்னர் ஆண்டிற்கு 5 விழுக்காடு என்ற விகிதத்தில் உயர்த்தப் பட்டது. இன்று ஒரு படுக்கையறை, அத்துடன் இணைக்கப்பட்ட கழிவறை, குளியலறை, வர வேற்பரை மற்றும் சமையலறை அடங்கிய வீட்டின் வாடகை ரூ.5635. அடுத்த வகை வீடு என்பது இதே வசதிகளுடன் வரவேற் பரை மட்டும் சற்று பெரியதாக உள்ள வீட்டின் வாடகை ரூ.7600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள் ளது. சி டைப்பில் 2 படுக்கையறைகள் வரும். இந்த வகை வீடுகளின் வாடகையாக ரூ.11,500 ஆகும். கழிவறை, குளியறையுடன் கூடிய 3 படுக்கையறைகள், வரவேற்பரை, சமைய லறை மற்றும் இருப்பு அறை (ஸ்டோர் ரூம்) கூடிய வீடுகள் உள்ளது. இவற்றிற்கு வாடகை ரூ.23 ஆயிரம். இவ்வாறு அமைந்த குடியி ருப்பு முற்றிலும் ஊழியர்கள் பயன்பாட்டில் இருந்தது.
பணி ஓய்வு பெற்றவர்களும் அக்குடி யிருப்பில் தங்கியிருந்தனர். அதற்காக நீதி மன்றம் வரை சென்றனர் என்று கூறப்படு கிறது. ஆனால் இன்று அந்த குடியிருப் பில் வெறும் 10 வீடுகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இதற்கு காரணம் பிஎஸ்என்எல்ல் நடைபெற்ற ஆட்குறைப்பு. ஊதியம் கொடுக்க கால தாமதமானது. மாதாமாதம் ஊதியம் பெறுவதற்கே போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் விருப்ப ஓய்வு திட் டத்தில் பெரும்பாலானவர்களை வீட்டுக்கு அனுப்பியது அரசும், நிர்வாகமும். நல்ல மரங்களும், விசாலமான வீதி களும், தண்ணீர் வசதியும், குழந்தைகள் விளையாட பூங்காவும், பொது பயன்பாட் டிற்கு சமுதாயக் கூடம் என சங்கம் அமைத்து வாழ்ந்து வந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள் ளனர். இன்று புதர் மண்டி, காரைகள், பூச்சு கள் சில இடங்களில் பெயர்ந்திருந்தாலும் வாழத்தகுந்த வாழ்ந்து கெட்ட வீடுகள் பரிதா பமாகக் காட்சியளிக்கிறது. வாழ்ந்து கெட்டது வீடுகள் மட்டுமல்ல, ஊழியர்களின் நிலையும் அதுவாகத்தான் இருக்கிறது. இன்றும் இருக்கிற குறைந்த பட்ச எண்ணிக்கையிலான ஊழியர்களை கொண்டு கார்ப்ரேட் தொலைத்தொடர்பு நிறு வனங்களோடு சரிசமமான போட்டிகளை எதிர்கொண்டு வருகின்றனர் பிஎஸ்என்எல் ஊழியர்கள். கார்ப்ரேட் நலனுக்காக இந்திய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்ல் நிறு வனத்தை சீரழித்த ஒன்றிய அரசுக்கு தக்க பதி லடி தருவதற்காக காத்திருக்கிறார்கள் மக்க ளோடு சேர்ந்து பிஎஸ்என்எல் ஊழியர்களும் அவர்களின் குடும்பத்தினரும்.