districts

img

உடுமலையில் இலக்கிய கூட்டம்

உடுமலை, மார்ச் 13- உடுமலை இலக்கிய  களத்தின் மார்ச் மாத இலக்கிய  கூட் டம் உடுமலைப்பேட்டை மீனாட்சி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை  நடைபெற்றது.  அரசு கல்லூரி பேராசிரியர் ந.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தேனி சீருடை யானின் “கடை  “என்ற நாவல் குறித்து  கோவையைச் சேர்ந்த திறனாய்வாளர்  பட்டிமன்ற பேச்சாளர் சுடர் பேசினார்.  அதைதொடர்ந்து “சங்க  இலக்கியத்தில் மர வழிபாடு” குறித்து உடுமலை அரசு கலைக்  கல்லூரி பட்ட ஆய்வாளர் சதீஷ்குமார் ஆய்வுரை செய்தார். இந்நிகழ்வில், பொள்ளாச்சி இலக்கிய வட்ட செயலா ளர் பூபாலன், முதுகலை மொழி ஆசிரியர்   மருதமுத்து, அரசு  கலைக் கல்லூரி  முதுகலைப்பட்ட மாணவி  பவித்ரா, பொள் ளாச்சி கவிஞர் மூர்த்தி ஆகியோர் கலந்து குறித்து பேசினார் கள். இந்நிகழ்ச்சிகளை கவிஞர் இளையவன் சிவா ஒருங்கி ணைத்தார். இறுதியாக உடுமலை இலக்கியக்  களத் தலைவர்  செல்லத்துரை நன்றி கூறினார்.