தருமபுரி ஆக-17, தருமபுரி அருகே பட்டியலினப் பெண்ணை கடத்தி சென்று நிர்வாணப் படுத்தி மதுபானம் ஊற்றி சித்திர வதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 15 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தருமபுரி மாவட்டம் அரூர் வட் டத்தை சேர்ந்த பெண் ஒருவரை, பட்டி யலினத்தை சேர்ந்த சுரேந்தர் என்ப வர் பள்ளிப் பருவத்தில் இருந்து காத லித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 14 அன்று சுரேந்தர் வீட்டை விட்டு சென்றவர் காலை முதல் வீட்டிற்க்கு வர வில்லை. அதே நேரத்தில் அப்பெண் ணும் காணவில்லை என்றும் சொல் லப்படுகிறது. இந்நிலையில் அப் பெண்ணின் தந்தை மற்றும் உறவி னர்கள் என 20 பேர், சுரேந்தர் வீட் டுக்கு ஆகஸ்ட் -15 அன்று சென்று சுரேந்தரின் தந்தை செல்வம் மற்றும் அவரது தாய் இருவரையும் அடித்து மிரட்டியுள்ளனர். அதை பார்த்த செல்வத்தின் அண் ணன் மகன் அர்ஜுன்சுப்பிரமணி, தடுத்தபோது, அவரையும் அடித்துள் ளனர். பின்னர், சுரேந்திரன் தாயை இரு சக்கர வாகனத்தில் கட்டாயப்படுத்தி ஏற்றிச்சென்றுள்ளனர். இதுகுறித்து சுரேந்திரனின் தந்தை மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த னர். இதனையடுத்து, மொரப்பூர் காவல்துறையினர் 16 ஆம் தேதி கடத் தப்பட்ட பெண்ணை மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட பின்பு அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். மேலும், பெண்ணை கடத்திச் சென்ற பூபதி, செல்வி, பொன்ராசு, கலையரசன், வேலு, என ஐந்து பேர் உள்ளிட்ட 15 மீது எஸ்.சி / எஸ்.டி, பிரி வின் கீழ் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து கடத்திச் செல்லப் பட்ட பெண் கூறுகையில், காட்டுப்ப குதிக்கு அழைத்துச் சென்று என் மகன் எங்கே என்று கேட்டு பல்வேறு சித்திரவதைகளை செய்தனர். கட்டா யப்படுத்தி மதுபானத்தை வாயில் ஊற்றினர். பின்னர் மயங்கி இருந்த நான் விழித்துப் பார்க்கும்போது ஆடை இன்றி இருந்தேன். பின்னர், உன் மகன் இருக்கும் இடம் சொல்ல வில்லை என்றால் குடும்பத்தோடு கொன்று விடுவோம் என மிரட்டிச் சென்றனர். அதன் பிறகு காவல்துறை யினர் அந்த இடத்திற்கு வந்து எண்ணை மீட்டுச்சென்றனர் என் றார்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி
இது குறித்து தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் ஏ.சேகர் கூறு கையில் : பட்டியலினப் பெண்ணை கடத்தி சென்று நிர்வாணப்படுத்தி வாயில் மது ஊத்தி பல்வேறு சித்திரவதை களை சாதி ஆதிக்க கும்பல் செய் துள்ளனர்.இரவு முழுக்க சித்திர வதை செய்து பின்னர் விடுவித்துள்ள னர் இந்த வழக்கில் உள்ள அனை வரையும் கைதுசெய்யவேண்டும்.சாதி ஆதிக்க சக்திகளால் முருக்கம் மாள் குடும்பத்திற்கு கொலை மிரட் டல் விடுத்துள்ளனர்.எனவே அந்த குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தொடர்ந்து அரூர் பகுதியில் பட்டி யினத்தவருக்கு பல்வேறு வடிவங்க ளில் தீண்டாமை கடைப்பிடிக்கப் பட்டு வன்கொடுமைக்கு உள்ளாக் கப்படுகின்றனர்.இது போன்ற சம்ப வங்களில் காவல்துறையினர் குற்ற வாளிகளிடம் மென்மையான போக்கை கடைபிடித்து வருகின்ற னர். இது போன்ற விசயங்களில் மெத்தனமாக செயல்படுகின்றனர்.எனவே பட்டியல் இன மக்கள் பாதிக் கப்படும் போது காவல்துறை விரைந்து செயல்பட்டு குற்றவா ளிக்கு தண்டனை பெற்றுதரும் மூலம் வன்கொடுமை தடுக்கமுடியும் என தெரிவித்தார்.