districts

img

சென்னை, மதுரையைப் போல ஈரோட்டிலும் பெரிய நூலகம்

ஈரோடு, ஆக. 23- சென்னையில் அறிஞர் அண்ணா பெயரில், மதுரையில் கலைஞர் பெய ரில் உள்ள நூலகத்தை போல ஈரோட்டி லும் பெரிய நூலகம் அமைக்கப்படும் என அமைச்சர் சு.முத்துச்சாமி தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், நசியனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற  வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துச் சாமி வெள்ளியன்று ரூ.348.64 லட்சம்  மதிப்பில் புதிய திட்டப் பணிகளை  தொடங்கி வைத்து 158 பயனாளிக ளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர் வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில்  நடைபெற்ற இவ்விழாவில் பங்கேற்ற  அமைச்சர். முத்துசாமி செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது, கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களுக்கு மொத் தம் ரூ.123.94 லட்சம் மதிப்பீட்டில் புதிய  திட்டப்பணிகளை பொதுமக்கள் மற்றும்  சங்க உறுப்பினர்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும்,  28 பயனாளிகளுக்கு ரூ.40 லட்சம் மதிப் பீட்டில் பயிர்கடன், 12 பயனாளிகளுக்கு  ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நகைக்கடன்  உள்ளிட்டு, மொத்தம் 158 பயனாளிக ளுக்கு ரூ.2 கோடியே 24 லட்சத்து 70 ஆயி ரம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட  உதவி கள் வழங்கப்பட்டுள்ளது.  ஈரோடு மாவட்டத்தில் மிகப்பெரிய  அளவில் நூலகம் அமைத்து போட்டித் தேர்வுகளில் மாணவ, மாணவியர்கள் அங்கு பயின்று  பெரிய அளவில் உயர வேண்டும் என்ற  நோக்கம் உள்ளது. பன்னீர்செல்வம்  பூங்காவில் நூலகம் அமைக்கப்பட்டுள் ளது போல, முனிசிபல் காலனியிலும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல், கோபிசெட்டிபாளையம் கள்ளி பட்டியிலும் ஒரு நூலகம் அமைக்கப்பட் டுள்ளது. மாணவ, மாணவியர்கள் இந்த  நூலகங்களில் பயின்று முழுமையாக பயன்பெற வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநக ராட்சி மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு ஊராட்சி ஒன்றியக்குழு தலை வர் எஸ்.பிரகாஷ், கூட்டுறவு சங்கங்க ளின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், துணைப்பதிவாளர் காளிதாபானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.