திருப்பூர், ஜூன் 26- நீதிமன்ற உத்தரவுபடி ஊதியம் வழங்க ஒப்புதல் அளிப்பது தொடர்பாக நிர்வாக இயக்குனருக்கு கடிதம் அனுப்புவதாக மாந கராட்சி மற்றும் நகராட்சி ஆணையாளர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டதை ஒத்திவைப்பதாக சிஐடியு சங்கத்தினர் தெரி வித்துள்ளனர். திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள் ளாட்சி துறை ஊழியர் சங்கம் சிஐடியு தொடுத்த வழக்கில் நீதிமன்ற அளித்த உத்தர வுப்படியும், நகராட்சிகளின் நிர்வாக இயக்கு னர் உத்தரவுப்படியும், திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் உத்தரவின் படியும், மாநகராட்சி, நக ராட்சி, பேரூராட்சிகளில் வேலை செய்யும் தினக்கூலி ஒப்பந்த ஊழியர்களுக்கு அர சாணை 2டி எண் 62 இன் படி, ஊதியம் நிர்ண யித்து நிலுவை தொகையை வழங்கிட வேண் டும். ஈபிஎஃப், இஎஸ் ஐ பிடித்தங்களை முறை யாக நிறுவனங்களின் பங்கு தொகையுடன் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் திங்க ளன்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற் றது. அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாததால், செவ்வாயன்றும் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் செவ்வாயன்று தொழிலா ளர் துறை உதவி ஆணையர் பிரேமா தலை மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி நகராட்சி, பல்லடம் நகராட்சி, உடு மலை நகராட்சி, வெள்ளகோவில் நகராட்சி, காங்கேயம் நகராட்சி, தாராபுரம் நகராட்சி ஆணையாளர்கள் நீதிமன்ற உத்தரவு படியும், மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படியும் ஊதியம் வழங்க ஒப்புதல் அளிக்க கோரி நிர்வாக இயக்குனருக்கு கடிதம் அனுப்பி, அதன் நகலை சிஐடியு சங்க நிர்வாகிகளிடம் அளிப்பதாக ஒப்புதல் அளித்தனர். மேலும், திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தி லும், 6 நகர்மன்ற கூட்டத்திலும் ஊதியம் வழங் குவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்று வது. இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பழிவாங் கும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என உறுதியளித்தனர். இதையடுத்து போராட் டத்தை ஒத்திவைப்பதாக சிஐடியு சங்கத்தி னர் தெரிவித்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், துணைத் தலைவர் கே.உன்னிகிருஷ்ணன், பொருளா ளர் ஜி.சம்பத், ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க (சிஐடியு) மாவட்டத் தலைவர் பி.பழனிசாமி, திருமுருகன்பூண்டி நகரமன்ற உறுப்பினர் சுப்பிரமணி ஆகி யோர் கலந்து கொண்டனர்.