-சி.தனபால் (எ) பாபு, கோவை கடந்த 1980 ஆம் ஆண்டுக்கு முன்னால் கோவை, ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட ஒன்றுபட்ட மாவட்டத்தில் ஜவுளி ஆலைகளும் அதைச் சார்ந்த உற்பத்தி நிறுவ னங்களுமே இருந்தது. அதன்பின் 1980 களில் ஏற்பட்ட தொழில் புரட்சியின் காரணமாக தொழிற்சாலைகள் கட்ட ஆரம்பித்தனர். பிஎஸ்ஜி மற்றும் சிஐடி கல்லூரிகளில் படித்த கோவை மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் வெளிநாடு சென்று அங்குள்ள தொழில் நுட்பங்களை கற்றறிந்தனர். பின்னர் கோவை மாவட்டத்தில் ஆங்காங்கே தொழிற் சாலைகளை உருவாக்கி உற்பத்தியை பெருக்கினார்கள். இதன் தொடர்ச்சியாகவே கணபதி, ஆவராம்பாளையம், பீளமேடு, தண்ணீர் பந்தல், மலுமிச்சம்பட்டி சிட்கோ ஆகிய பகுதிகளில் தொழிற்சாலைகள் உருவானது. மேலும், இக் காலத்தில்தான் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளில் முன்பக் கத்தில் வீடும், பின்பக்கத்தில் தொழிற்கூடம் அல்லது பின் பக்க வீடு முன் பக்க தொழிற்கூடம் என சிறு அளவில் ஏற்ப டுத்தி, மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டோம். கோவை தொழில்துறை நாம் உருவாக்கியதே நமக்கு இருக்கும் திறமையின் காரணமாக, நம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில், இன்ஜி னியரிங் தொழிலை கற்றுக்கொண்டு சிறு-குறு தொழில்கள் பம்பு செட், வெட் கிரைண்டர் மற்றும் பல்வேறு இன்ஜினிய ரிங் மெஷின் ஷாப் என உருவாக்கப்பட்டது. இவை அனைத் தும் நமது உழைப்பை தவிர வேறு எதுவும் இல்லை. இன்று, கோவை மாவட்டம் சிறு குறு தொழில் முனை வோர்களின் முனைப்பால் பம்புசெட், வெட் கிரைன்டர், வார்ப்பட தொழில் இயந்தி ரம் மற்றும் பல்வேறு வகையான இயந்திர தளவாடங் களை நமது திறமையால், குறைந்த விலையில் அதிக தரத்துடன் உற்பத்தி செய்து உலகம் முழுவதும் ஏற்று மதி செய்கிறோம். நமது கோவை மாவட்டத்தின் பெரு மையை உலகம் அறியச்செய்தோம். 2010 ஆம் ஆண்டு வரை அனைத்து தொழில்களும், கோவையும் அதனை சுற்றி யுள்ள மாவட்டங்களிலும் வளர்ந்தது. நமது இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு தங்க ளது உற்பத்தியையும் தொழில்நுட்பத்தையும் கொண்டு சென் றார்கள். வளர்ச்சி என்பது அந்த காலகட்டத்தில் இருந் தது.
2014ல் ஏமாற்றப்பட்டோம்
குஜராத்தில் தொழில் துறையில் மாபெரும் வளர்ச்சி என்று பொய்யாக கட்டமைக்கப்பட்டது. இந்த விளம்ப ரத்தின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு மத்தியில் புதிய அரசு அமைய வேண்டும் என்று எண்ணினோம். இந்தியா வில் உள்ள பல மாநிலங்கள் அதுபோலவே நினைத்தது. இங்கிருக்கும் சிறு-குறு தொழில் அதிபர்களும் அப்படியே நினைத்தார்கள். புதிய கட்சியும் (பாஜக) மத்தியில் ஆட் சிக்கு வந்தது. இனி தொழில் துறைக்கு மிகப்பெரிய உற்சாக மளிக்கும் திட்டங்களை வகுப்பார்கள் தொழில் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் இப்போது அந்த நம்பிக்கை கானல் நீராகவே உள்ளது. இன்று நாம் பேசிக் கொண்டிருக்கும் ஒரே விஷயம், தொழிற்சாலை களில் உற்பத்தி குறைவு, நுற்பாலைகளை ஓட்டினால் செல வுக்குக்கூட மிஞ்சாது, வங்கி கடனை கட்ட முடியாத நிலை என்று மட்டும்தான் தொழில் முனைவோர் நாம் பேசி வருகி றோம். ஆனால், இதற்கு யார் காரணம் என்பதை நாம் யாரும் பேசுவது இல்லை. தொழிலை முடக்கிய பணமதிப்பிழப்பு கோவை மாவட்டம் போன்று குறுந்தொழில் கள் குடிசை தொழில்கள் உள்ள இடத்தில் நாம் அனைவரும் வாங்கும் பொருட்களுக்கு பணப் பரி வர்த்தனை மட்டுமே செய்து கொண்டு இருந்தோம். அப்படியான நேரத்தில் பணமதிப்பிழப்பு நடவ டிக்கை நமக்கு பேரிடியாக வந்து விழுந்தது. நாம் ஒன்றும் யாரையும் ஏமாற்றவில்லை, நாம் செய்யும் தொழிலுக்கு தேவையான பொருட்களை சுழற்சி (ரொட்டேஷன்) முறை யில் கொடுக்கல் வாங்கல் செய்துகொண்டிருந்தோம். எல் லோரும் நிம்மதியாக தொழில் செய்து கொண்டு இருந் தோம். அந்தத் தொழிலுக்கு சம்மட்டி அடியாக இந்த பண மதிப்பிழப்பு இருந்தது. இதிலிருந்து நாம் மீண்டு வருவ தற்கு சில காலம் ஆகிவிட்டது இதனால் தொழிலை இழந்து சென்றவர்கள் ஆயிரக்கணக்கான பேர்.
தொழில் நிறுவனங்களை முடக்கிய ஜிஎஸ்டி
அதற்குப் பின்னால் 2016 ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி புதிய வரி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. வழக்கம்போல் இங்கு இருக்கும் பெரும் தொழில் அதிபர்கள் ஜிஎஸ் டியை கொண்டாடினார்கள். ஆனால் அது குடிசைத் தொழி லாகவும் செய்து கொண்டிருக்கும் இலட்சோப லட்சம் தொழில் முனைவோரை முடக்கியது. மிகப்பெரிய தொழிற் சாலை வைத்திருப்பவரும், வீட்டில் வைத்து தொழில் நடத்துபவருக்கும் ஒரே சமமான வரி என்பது கொள்கை யாக சென்றபின், நம்மில் பல பேர் காணமல் சென்றனர். நாம். ஒன்றும் ஜிஎஸ்டி வேண்டாம் என்று சொல்ல வில்லை. பெரிய தொழிற்சாலைகளுக்கும் சிறிய தொழிற் சாலைக்கும் சில வித்தியாசங்கள் வேண்டும். ஜாப் ஒர்க் செய்யும். நிறுவனங்களுக்கு ஐந்து சதவிகிதம் ஜிஎஸ்டி இருந்தால் போதும் என்பதே. ஆனால், நமது கோரிக்கையை ஒன்றிய அரசு இதுவரையில் ஏற்கவே இல்லை என்பதே உண்மை.
எப்படி வளர்ச்சியை காண முடியும்
இந்த 10 ஆண்டுகளில் அதுவும் குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து இடத்திலும் கார்ப்பரேட் கம்பெனி கல்ச்சர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நம்மை போன்ற சிறு தொழில் செய்துகொண்டிருப்பவரையும் அதை நோக்கியே இழுக்கின்றது. இன்று மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங் கள் செய்யும் உற்பத்தி பொருட்களுக்கு ஈடாக நம்மால் விற்பனை செய்ய முடியாமல் நிலைத்தடுமாறிக் கொண்டி ருக்கிறோம். நமது தொழிலை மூடும் நிலைக்கு சென்று விட்டோம். தற்போது இருக்கும் ஒன்றிய அரசு எதை எடுத்தாலும் கார்ப்பரேட் மற்றும் பிராண்ட் நிறுவனங்களா கவே விளம்பரம் செய்து கொண்டு இருக்கின்றது. நம்மை போன்ற குறு மற்றும் சிறு தொழிலுக்கு எந்த விதமான உதவிகளையும் செய்வதில்லை என்பது கண் கூடு. அடுத்து, கோவிட் என்ற பெரும் தொற்று நோய், சிறு தொழில் முதல் பெரும் தொழில் வரை அனைத்து உலக நாடுகளையும் முடங்கியது. அந்த சமயத்தில் ஒன்றிய அரசு நமக்கு வங்கி மூலமாக உதவிகளை செய்வதாக தம் பட்டம் அடித்தது. நாமும் பரவாயில்லை இந்த ஆட்சி நம்மை காப்பாற்றுகிறது என நினைத்தோம். ஆனால், நாம் வங்கி யில் வாங்கிய கடன் தொகை அனைத்தும் அவர்களுக்கு வட்டி கட்டவே சரியாக போனது. ஒன்றிய அரசிடம் இருந்து எந்த விதமான உதவியும் நமக்கு கிடைக்கவில்லை என் பதே அனுபவம். அப்பொழுது விழுந்த பல தொழில்கள் இன்னும் எழுந்தி ருக்கவில்லை, பல்வேறு தொழில் அதிபர்கள் ஆங்காங்கே தற்கொலை செய்வதை அவ்வப்போது செய்தித்தாள்களில் பார்த்து வேதனையடைகிறோம். இப்போது, மூலப் பொருட் களின் விலைகளை 100 சதவிகிதத்திற்கும் மேல் உயர்த்தி னார்கள். உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை. நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு நமது தொழிலை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது தான் இந்த மூலப்பொருள் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தை ஆட்சி செய் யும் (பாஜக) ஆட்சியாளர்களுக்கு தேர்தல் பத்திரங்களின் வழியாக கோடிக்கணக்கில் நன்கொடை கொடுத்திருப்பதை அறிகின்றோம். ஆகவே, நாம் அனைவரும் முட்டாள்கள் ஆக்கப்பட்டு இருக்கிறோம். இவர்கள் சொல்லும் வளர்ச்சி யாருக்கானது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இவர்களின் வாய் ஜாலங்களுக்கு நாம் விட்டில் பூச்சிகளாய் விழுந்து விடக்கூடாது. யார் ஆட்சிக்கு வந்தாலும் இப்படித்தான் இருக்கும் என்கிற வெறுப்பும் இப்போது ஏற்படக்கூடாது. அனைத்து தொழில்களும் சீராக வளர்ந்தது அல்லது அனைத்து தொழில்களும் ஒரே மாதிரியான தேக்கநிலை கண்டது உண்மை. ஆனால், பாஜக ஆட்சியில் அப்படி யில்லை. பெரும் தொழில் முனைவோர் அதைவிட பன் மடங்கு உற்பத்தியை பெருக்கி கொண்டே செல்கின்றார். நம்மைப்போன்ற குறுந்தொழில் முனைவோர்கள் அடி பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம். கடன் அதிக மானதை நினைத்தால் நமது நெஞ்சம் குமுறுகிறது. பெரும் பாலான தொழில்கள் ஆழியும் நிலைக்கு செல்கிறது என்பது உண்மைதான். அதற்காக நாம் பயந்து கொள்ளவோ, அச்சப்படவோ தேவையில்லை. நமது தொழிற்கூடங்களை பாதுகாக்க இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க, தேசத்தை பாதுகாக்க, பத்து ஆண்டுகாலம் ஆட்சி செய்த ஒன்றிய அரசை ஆட்சியை விட்டு அகற்றிட தொழில்முனை வோர்கள் ஒன்றிணைவோம்.