திருப்பூர், செப்.8– ஒன்றிய அரசின் தவறான கொள்கை களால் நிலைகுலைந்து போயுள்ள திருப்பூர் பனியன் தொழிலை மீட்டெடுக் கவும், தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தைப் பாதுகாக்கவும் அனைத்து பனி யன் தொழிற்சங்கங்கள் சார்பில் கருத்த ரங்கம் உள்ளிட்ட இயக்கங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட அனைத்து பனி யன் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளியன்று மாலை தொமுச அலுவலகத்தில் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு தொமுச பனி யன் சங்கப் பொதுச்செயலாளர் க.ராம கிருஷ்ணன் தலைமை ஏற்றார். இக்கூட் டத்தில் தொமுக பனியன் சங்கத் தலை வர் ஜீ.பாலசுப்பிரமணியம், பொருளா ளர் பூபதி, சிஐடியு பனியன் தொழிற்சங் கத் தலைவர் சி.மூர்த்தி, பொதுச் செய லாளர் ஜி.சம்பத், ஏஐடியுசி பனியன் சங்க துணை தலைவர் எம்.ரவி, பொதுச் செயலாளர் என்.சேகர், ஐஎன்டியுசி பனி யன் சங்க தலைவர் அ.பெருமாள், செய லாளர் அ.சிவசாமி, எம்எல்எப் பனியன் சங்கத் தலைவர் மு.சம்பத், செயலாளர் மனோகரன், எச்எம்எஸ் பனியன் சங்கச் செயலாளர் ஆர்.முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் திருப்பூர் பனியன் தொழில் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதனால் திருப்பூர் மக்களின் சமூகப் பொருளாதார வாழ்க்கை மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, திருப்பூர் பனியன் தொழிலை மீட்டெடுக்கவும், தொழிலா ளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக் கவும் திருப்பூரில் உள்ள பனியன் தொழி லாளர்களின் சார்பாக தொழிற்சங்கங் கள் கருத்தரங்கம் உள்ளிட்ட இயக்கங் கள் நடத்துவது என முடிவு செய்யப் பட்டது.