கோபி, ஏப். 5- கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கள் ளிப்பட்டியில் தொடங்கிய பிரச்சாரம் கரட்ட டிபாளையம், கலியங்கியம், அயலூர், அளுக்குளி, மொடச்சூர், நாதிபாளையம், சிறுவலூர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் வாக்காளர்களிடையே கதிர்அரிவாள் சின்னத்தில் வாக்குசேக ரித்தார். முன்னதாக, வாக்கு சேகரித்து கே.சுப்ப ராயன் பேசுகையில், தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகி றார். இதில் குறிப்பாக மகளிருக்கான இல வச பேருந்து, மகளிர் உரிமைதொகை, புது மைபெண் திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வரு கிறது. திமுக அரசு தற்போது மகளிருக்கு வழங்கும் உரிமை தொகை விதை போட்டுள் ளது. இந்த விதை செடியாக வளர்ந்து மர மாகி பயன்களை தருவதுபோல் மீண்டும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவார். அதேநேரத்தில், ஒன்றியத்தில் தறிகெட்டு ஓடிகொண்டிருக்கும் பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். நாட்டை பாசிச சக்தி களிடமிருந்து மீட்டெடுக்க கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார். இப்பிரச்சாரத்தில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முனுசாமி, தாலுகா கமிட்டி செலாளர் துரைசாமி, விவசாய தொழி லாளர் சங்க விஆர். மாணிக்கம், திமுக ஒன்றியச் செயலாளர் சிறுவலூர் முருகன், கொமதேக மாவட்டச் செயலாளர் சிவராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல நிர்வாகி சுசிகலையரசன், மொடச்சூர் ஊராட்சித் தலைவர் சரவணன், மாதர் சங்க நிர்வாகிகள் மல்லிகா, சுதந்திரா, லட்சுமிபி ரியா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.