ஈரோடு, ஏப் 1- ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி வனச்சரத்துக்கு உட்பட்ட கும்டாபுரம் கிராமத்தில் விவசாய தோட்டத்தில் ஒரு சிறுத்தை உயிரிழந்து கிடப்பதாக தாள வாடி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. பின்பு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை உடலை கைப்பற்றினர். பின்னர் கால்நடை மருத்துவர் சதாசிவம் வரவ ழைக்கப்பட்டு அந்த இடத்திலேயே சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்த மருத்துவர் சதாசிவம் கூறுகையில், உயிரி ழந்த சிறுத்தைக்கு 5 வயது இருக்கும். விஷம் வைத்தோ மின்சாரம் பாய்ந்தோ உயிரிழக்கவில்லை. உடற்கூறுகள் ரசாயன பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது என்றார். இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.