உடுமலை, ஜன.1- இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் உடுமலையில் திங்க ளன்று நடைபெற்றது. சிஐடியு, கணக்கம்பாளையம் அரசு ஊழியர் ஓய்வூதியர் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்டோர் கழகத் தின் சார்பில் உடுமலை பெரிய கடை வீதி கொங்கு திருமண மண்டபத்தில் சட்ட விழிப்புணவு பயிற்சி முகாம் முழுநாள் வகுப்பாக நடைபெற்றது. சட்டம் சாமானியனுக்கு பாறாங்கல், சட்டம் அறிந்தவருக்கோ அது சானைக்கல், சட்டம் அறிய வாரீர் என்கிற தலைப்பில் இம்முகாம் நடைபெற்றது. இதில், நீதிமன்ற நடைமுறைகள், அரசியலமைப்பு சட்டம் - 1950, உரிமையியல் விசா ரணை – 1908, சட்டமன்றமும், நீதிமன் றமும், தகவல் ஆணையமும். உண் மையும் – பொய்யும், நுகர்வோர் நீதிமன்றம் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்துவது குறித்தும் சிறப்பு வகுப்புகளை வழக் கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர் கள் நடத்தினர். முன்னதாக, இந்நிகழ்விற்கு சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் விஸ்வநாதன் தமைமை வகித்தார். இதில், சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன், மாவட்ட துணைத்தலைவர் எல்லம்மாள், உடு மலை சிஐடியு நிர்வாகிகள் ரங்கநா தன், கனகராஜ் உள்ளிட்டோர் உரை யாற்றினர். நிறைவாக, திருப்பூர் சட்ட உதவிமையத்தின் மாவட்டத் தலை வர் வை.ஆனந்தன் உரையாற்றி னார். இந்த சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகமில் ஏராளமானோர் பங்கேற்ற னர்.