நாமக்கல், ஜூன் 1- மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நாமக்கல் மாவட்டம், முள்ளுக்குறிச்சி பேருந்து நிறுத் தம் அருகில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் போன்ற அத்தியாயவசிய உணவு பொருட்கள் மீதான வரிகளை கைவிடவேண்டும். பருப்பு,எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் ரேஷன் கடைகளில் தங்கு தடையின்றி வழங்கிட வேண்டும். வரு மான வரி வரம்பை எட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூபாய் 7500 வழங்கிட வேண்டும். ஒன்றிய பாஜக மோடி அரசு வெறுப்பு அரசியல் மூலம் இந்திய சிறுபான்மை மக்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் பறிக்கக் கூடாது. தலித் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திட வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம், முள்ளுக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம கிரிப்பேட்டை ஒன்றிய குழு உறுப்பினர் ஏ.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி, ஒன்றிய செயலாளர் கே.சின்னசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.வசந்தா, கிளை செயலாளர் எஸ்.சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு அதேபோல், ஈரோடு, பெருந்துறை வட்டம், காஞ்சிக் கோவிலில் சிபிஎம், சிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெருந்துறை தாலுக்கா செய லாளர் பி.முத்துபழனிசாமி தலைமை வகித்தார். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பரமசிவம், இடைக்குழு உறுப்பினர் வி.ஏ.விஸ்வநாதன், சிபிஐ திரு நாவுக்கரவு, துளசிமணி, தெய்வசிகாமணி, விசிக திருமா. குணவளவன், மணல் முரளி, சந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.