districts

img

வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்கம்

திருப்பூர், பிப்.7- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.   திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும்  15 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ர வரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, மாநில தேர் தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க வாக்காளர் விழிப்பு ணர்வு குறும்படங்கள் வாக்காளர் விழிப்புணர்வு வாகனத் தின் மூலம் நகராட்சிகள், மாநகராட்சி மற்றும் பேரூராட்சி பகு திகளில் திரையிடப்படுகிறது. இந்நிலையில் இந்த வாக னத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.