திருப்பூர், செப்.28- புரட்சியாளர் மாவீரன் பகத்சிங் 116 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந் திய ஜனநாயக வாலிபர் சங்க வடக்கு ஒன்றியக்குழு சார்பில் இரத்ததான செயலி வெளியீடு மற்றும் பாராட்டு விழா ஆத்துப்பாளையம் காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் வியாழனன்று நடைபெற்றது. வாலிபர் சங்க வடக்கு ஒன்றிய தலை வர் ஜி.ரேவந்த் தலைமையில் இந்த விழா நடைபெற்றது. கிளை தலைவர் பாலாஜி வரவேற்றார். ஒன்றியச் செய லாளர் சந்தோஷ் அறிமுகவுரையாற்றி னார். திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப் பினர் கே.என்.விஜயகுமார் இரத்ததான செயலியை வெளியிட்டார். இதைத்தொ டர்ந்து, மண்டல அளவில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் வெற்றி பெற்ற வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும், மாவட்ட அளவில் சிலம்பப்போட்டியில் வெற்றி பெற்ற பகத்சிங் சிலம்பக்குழு மாணவ, மாணவியர்களுக்கும் எம்எல் ஏ விஜயகுமார் பதங்கங்களை வழங்கி னார். இதையடுத்து வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.அருள், மாவட் டச்செயலாளர் எஸ்.மணிகண்டன், முன் னாள் ஒன்றியத் தலைவர் ஆ.சிகாமணி, உடற்கல்வி ஆசிரியர் ராஜா ஆகியோர் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவி யர்களை பாராட்டிப் பேசினர். முடிவில் ஒன்றியத் துணை செயலாளர் பி.நரேந் திர பிரசாத் நன்றி கூறினார். இதில், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரஜேஸ்வரி, பள்ளி மாணவ மாணவியர்கள் உட்பட 100க் கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.