கோவை, ஆக.22- நிலாவில் உள்ள கள நிலவரம் மிகவும் சவாலானது. சந்திரயான் - 2 விண்கலத்துக்கு ஏற்பட்ட நிலை தான், லூனா – 25 விண்கலத்துக்கு ஏற்பட்டிருக்கும் என விஞ்ஞானி மயில் சாமி அண்ணாதுரை கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ரஷ்யா நிலவுக்கு அனுப்பிய லூனா - 25 விண்கலம் தரையிறங்க முடியா மல் நொறுங்கியது அனைவருக்கும் அதிர்ச்சியை தரலாம். சர்வதேச விண் வெளி துறையில் மிகுந்த அனுபவம் உடைய தேசம் எப்படி தோல்வியை தழுவியது என்று பலரும் நினைக்க லாம். ஆனால், உண்மையில் நிலா வில் உள்ள களநிலவரம் மிகவும் சவாலானது. சந்திரயான் - 2 விண் கலத்துக்கு ஏற்பட்ட நிலைதான், லூனா – 25 விண்கலத்துக்கு ஏற்பட்டி ருக்கும் என கருதுகிறேன். நிலவில் விண்கலத்தை தரையி றக்கும் முன்பாக வேகத்தை குறைக்க வேண்டியது அவசியம். அப்போது உயரமும் படிப்படியாக குறைந்து
கொண்டே வரும். நிலாவின் சம வெளி பகுதியில் பல கிலோமீட்டர் தொலைவுக்கு மலைமுகடு போல இருக்கும். இத்தகைய சூழ்நிலை யில் அங்கு விண்கலத்தை தரையி றக்கும் போது கரடுமுரடான இடங்க ளில் சிக்கி அசம்பாவிதம் நிகழ வாய்ப்பு உண்டு. ரஷ்யாவின் விண்க லத்துக்கு அதில் தான் பிரச்சனை ஏற் பட்டிருக்கும் என கருதுகிறேன். அந் நாட்டின் 14 ஆண்டுகால உழைப்பு நொடிப்பொழுதில் கானல் நீரானது மிகவும் வருத்தம் தருகிறது. நாம் இதுவரை பார்த்திராத இடத்தில், ஒரு சவாலான காரியத்தை மேற் கொள்ளப் போகிறோம். லூனா – 25 விண்கலத்தின் வேகத்தை குறைக் கும்போது, ரஷ்யாவுக்கு பிரச்சனை ஏற்பட்டது. ஆனால், நாம் சந்திர யான் - 3 விண்கலத்தின் வேகத்தை 2 நாட்களுக்கு முன்பே குறைத்து வெற்றிகரமாக இயக்கி வருகி றோம். சந்திரயான் - 2 உடன் அனுப்பப் பட்ட ஆர்பிட்டருடன், தற்போது சந்தி ரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டருக்கு தகவல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்போது வரை நடப்பது எல்லாமே இந்தியா வுக்கு சாதகமாக உள்ளது. இதனால் உலக நாடுகளிடம் சந்திரயான் - 3, விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் மீது நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது, என்றார்.