ஈரோடு, ஏப்.19- நில அளவை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். நில அளவை கள அலுவலர்களின் பல் வேறுபட்ட பணிச்சுமையை கருத்தில் கொள் ளாமல் நில அளவர் முதல் உயர்நிலை அலு வலர்கள் வரை அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நில அளவை மற்றும் நில வரி திட்ட இயக்குநரின், ஊழியர் விரோத போக்கைக் கண்டித்து நில அளவை அலுவ லர்கள் ஒன்றிப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட தலை வர் ப.கௌரிசங்கர் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அ. விஜயராஜன் கோரிக்கைகளை விளக்கி பேசி னார். அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் மு.சீனிவாசன் கண்டன உரையாற்றினார்.
கோவை
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜா.நிமலன் கிறிஸ்டோபர் தலைமை ஏற்றார். இதில், மாநிலச் செயலா ளர் த.சதீஷ்குமார், மாவட்ட செயலாளர் தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில், நில அளவை அலுவலர்கள் திரளா னோர் பங்கேற்றனர்.
சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நில அளவையர்கள் மற்றும் அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து முழக்கங்களை எழுப்பினர். மாவட்ட தலைவர் ராஜேந்தி ரன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்றார். இதில், மாவட்ட செயலாளர் மா.வெங்கடாச லம், மாநில துணைத்தலைவர் முருகேசன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் வி. அர்த்தனாரி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
தருமபுரி
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட தலைவர் கி.வெங்கடேசன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ரா.கல்பனா, மாவட்ட செயலாளர் சி.பிரபு, மாவட்ட பொருளாளர் மா.முருகன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ. சேகர், ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் கே. புகழேந்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ப. சங்கர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.