நாமக்கல், அக்.24- மார்க்சிஸ்ட் கட்சியின் பள்ளி பாளையம் தெற்கு ஒன்றியச் செயலாளராக லட்சுமணன் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய 8 ஆவது மாநாடு, புதனன்று நடைபெற் றது. ஒன்றியக்குழு உறுப்பினர் சம்பூரணம் செங்கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றியக்குழு உறுப்பி னர் கே.மோகன் தலைமை ஏற்றார். மாநாட்டை துவக்கி வைத்து மாநில செயற் குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ். கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். ஒன்றியச் செயலாளர் ஆர்.ரவி அறிக்கையை முன்வைத்தார். பள்ளிபாளையம் மேம்பாலப் பணியை விரைந்து முடித்து போக்கு வரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும். பள்ளிபாளை யம் அரசு மருத்துவமனையில் அனைத்து அத்தியாவசியமான சிகிச்சை முறைகளையும் கொண்டு வந்து, தரம் உயர்த்த வேண்டும். காவேரி ஆர்.எஸ். ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கும் பிரச் சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். பஞ்சாலை மற்றும் விசைத்தறி, சாயத்தொழில், கார்மெண்ட்ஸ் உள்ளிட்ட சிறு குறு தொழிலை பாதுகாத்திட அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, கட்சியின் பள்ளிபாளை யம் தெற்கு ஒன்றியச் செயலாளராக லட்சு மணன் உட்பட 11 ஒன்றியக்குழு உறுப்பினர் கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.பெருமாள் நிறைவுரை யாற்றினார். எஸ்.சரவணன் நன்றி கூறினார்.