உதகை, ஜூலை 21– குந்தா அணையில் சகதி மற்றும் கழி வுகள் அதிகரித்து காணப்படுவதால், மின் உற்பத்திக்குகூட தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. நீலகிரி மாவட்டம், குந்தா அணை யில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், கெத்தை, பரளி, பில்லுார் மின் நிலையங் களுக்கு ராட்சத குழாய் மூலம் கொண்டு செல்லப்பட்டு, தினசரி, 450 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. குந்தா அணை நீர்ப்பிடிப்பு பகுதியைச் சுற்றிலும் தேயிலை, மலை காய்கறி தோட்டம் அதிகளவில் உள்ளன. இந் நிலையில், தற்போது பெய்து வரும் கன மழையால், வெள்ளநீரில் அடித்து வரப் பட்ட கழிவுகள் அணையில் சேகரமாகி யுள்ளன. குந்தா அணையின் மொத்த அடியான 89 அடியில், பாதி அளவுக்கு சகதி மற்றும் பிற கழிவுகள் நிறைந்து காணப்படுகின்றன. கழிவுகளை அகற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்காத தால், பிற அணைகளுக்கு, தண்ணீர் கொண்டு செல்லும் நுழைவுவாயிலில் புதர் மண்டியுள்ளது. கழிவு நிறைந்தி ருப்பதால், தண்ணீர் கொண்டு செல்லும் ராட்சத குழாய், மின் நிலையத்தின் கரு விகள் பாதிக்கப்படுவதுடன், மின் உற் பத்தியும் அடிக்கடி தடைபடுகிறது. தண் ணீர் தேக்கி வைக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி கள் கூறுகையில், குந்தா அணையில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் சகதி யால் ஏற்படும் பாதிப்பு குறித்து சென்னை தலைமைக்கு தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது. உலக வங்கி நிதியும் தயார் நிலையில் உள்ளது. முக்கிய பிரச்சனை என்னவென்றால், குந்தா அணையிலிருந்து அகற்றப்படும் பல ஆயிரம் டன் சகதிகளை கொட்டுவதற்கு இடம் கிடைக்கவில்லை. ஒரு சில பகுதிகளில் ஆய்வு செய்தோம். அந்த இடங்கள் சதுப்பு நிலம் என சூழல் ஆர் வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரச்சனை குறித்து உயர் அதிகாரிக ளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம், என்றனர்.
வீணாக வெளியேறிய உபரி நீர்
கடந்த ஒரு வாரம் பெய்த பருவ மழையில் இரண்டு மணி நேரம் கன மழைக்கு நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. கடந்த ஜூலை 17 ஆம் தேதி காலை 7 மணி நில வரப்படி அணைக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருந்தது. இதனிடையே, குந்தா அணை ஏற்கனவே பாதியளவு சகதி யால் நிரம்பியிருந்த நிலையில், அணை முழு கொள்ளளவை எட்டி யதைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி உபரிநீர் அப்படியே வெளியேற்றப் பட்டது. ஜூலை 19 ஆம் தேதியன்று இரவு 8 மணி வரை பல ஆயிரம் கன அடி உபரிநீர் வீணாக வெளியேறி யது குறிப்பிடத்தக்கது.