கோவை, ஆக. 22- அவினாசி – அத்திகடவு திட்டத் திற்கு ஒரு பைசா நிதி கூட தமிழக பாஜ கவினர் நிதி வாங்கி கொடுக்க வில்லை. ஆனால், பெருமையில் மட் டும் பங்கு கேட்கின்றனர் என கொம தேக தலைவர் ஈஸ்வரன் சாடி உள்ளார். கோவை, சின்னியம்பாளையத் தில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அவினாசி அத்திகடவு திட்டம் 60 ஆண்டு கால போராட்டம், இத்திட்டத்தை ஆட்சியில் இருந்த அரசுகளும் புரிந்து கொண்டது. 2009 இல் அப்போதையை தமிழக முதல்வ ராக இருந்த கருணாநிதி இந்த திட்டத் திற்கு ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதன் பின்பு ஆட்சிக்கு வந்தவர்கள் அதை அப்படியே விட்டு விட்டனர். ஆய்வுப் பணிகளை தொடர வில்லை. கொமதேக மற்றும விவசாய அமைப் புகள் தொடர் போராட்டம் நடத்தியது. இந்த அழுத்தம் காரணமாக 2016 இல் அதிமுக அரசு ஆய்வு செய்ய ரூ. 3 கோடி ஒதுக்கப்பட்டது. அப்போது எதிர் கட்சி தலைவராக இருந்த ஸ்டா லினை அழைத்து வந்து போராட்டம் நடத்தி அரசுக்கு அழுத்தம் கொடுக் கப்பட்டது. அவினாசி அத்திகடவு திட்டத்தின் 67 சதவீத பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவு பெற்று இருந்தது. 2021 இல் இப்போதைய அரசு அமைந்தவுடன், இந்த திட்டத்திற்கு குழாய் அமைத்துள்ள பாதைகளில் ஆய்வு செய்யப்பட்டது. நிலத்தை பயன்படுத்த அனுமதி பல இடங்க ளில் பெறப்பட வில்லை, அதை பெறு வதில் சிக்கல் இருந்தது. இப்படி பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினை களை திமுக அரசு சிறப்பாக செய்தது. இந்த அரசு இப்போது இந்த திட் டத்தை கொண்டு வந்திருக்கின்ற னர். இந்த திட்டம் துவங்கப்படும் என தெரிந்த பின்பு பாஜக சார்பில் போராட்டம் அறிவித்தனர். 2009 இல் கலைஞர் கருணாநிதி ஆய்வு செய்ய உத்தரவிட்ட பின்னர், ஒன்றிய அரசிடம் நிதி உதவி கேட்கப்பட்டது. ஒன்றிய அரசு பணம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 2016- 18 ஆம் ஆண்டு வரை நிதியை பெற முயற்சித்தது. ஆனால், ஒரு பைசா கூட நிதியை ஒன்றிய அரசு கொடுக்க வில்லை. ஒரு பைசாநிதி பெற்று தராமல் பாஜக தலைவர்கள் இந்த திட்டத்தை பேசுவது நியாயமா?. பாஜக தான் இந்த திட்டத்தை கொண்டு வந்ததை போல பேசி கொண்டு இருக்கின்றனர். ஒரு பைசா நிதி கூட தமிழக பாஜகவினர் நிதி வாங்கி கொடுக்க வில்லை. பெருமை யில் மட்டும் பங்கு கேட்கின்றனர். உங்கள் பிரதமரிடம் பேசி திட்டங் களை வாங்கி கொடுங்கள். கொங்கு மண்டலத்தில் தொழில்களை அழித் ததே பாஜகவினர்தான். பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை கொங்கு மண்டலத்திற்கு, தமிழகத் திற்கு என்ன செய்து இருக்கின்றீர் கள்.? ஆக்கப்பூர்வமாக என்ன செய்து இருக்கின்றீர்கள்? என அடுக் கடுக்கான கேள்விகளை எழுப்பி னார்.