districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அரசு மருத்துவமனையில் மீண்டும் குழந்தை கடத்தல் 12 மணி நேரத்தில் குழந்தை மீட்பு; பெண் கைது

திருப்பூர், ஏப். 26 - திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில் பிறந்து மூன்று தினங்களே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்டது. சம்ப வம் நடைபெற்ற 12 மணி நேரத்தில் காவல்  துறையினர் துரிதமாக செயல்பட்டு கள்ளக் குறிச்சியில், கடத்திய பெண்ணை கைது செய்து, அந்த குழந்தையை மீட்டனர். ஒடிசாவைச் சேர்ந்த அர்ஜூன்குமார் (26) -  கமலினி (24) தம்பதியினர்,   பல்லடம் அருகே உள்ள கே.அய்யம்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து  வருகிறார்கள். கர்ப்பிணியான கமலினிக்கு ஏப்.22 ஆம் தேதி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை  பிறந்தது. வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கமலினியின் அருகில் சிகிச்சைக்காக எஸ்தர்  ராணி என்ற பெண் அனுமதிக்கப்பட்டிருந் தார். அவருக்கு உதவியாக உமா என்ற பெண் ணும் இருந்தார். அருகருகே இருந்ததால் உமா, கமலினியின் குழந்தையை கவனித்து  வந்து, அவருக்கு உதவி செய்துள்ளார்.   செவ்வாயன்று வேலைக்குச் சென்ற அர் ஜூன்குமார் மாலை மருத்துவமனைக்கு வந்து குழந்தையை கேட்டபோது, இன்கு பேட்டரில் சிகிச்சை அளிக்க குழந்தையை கேட்டு வாங்கி சென்றதாக உமா கூறியிருக்கி றார். சிகிச்சை அளிக்கும் இடத்திற்கு சென்று  அர்ஜூன் குமார் பார்த்தபோது, அங்கு  குழந்தை இல்லை. இதனால் அதிர்ச்சிய டைந்த அர்ஜூன் குமார் இது குறித்து செவி லியர்கள் மற்றும் அங்கிருந்தவர்களிடம் குழந் தையை காணவில்லை, அருகில் இருந்தவர் கள் கடத்தி சென்றுவிட்டனர் என தெரிவித்துள் ளார்.

குழந்தை கடத்தல் குறித்து திருப்பூர் தெற்கு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். கடத் திச் செல்லப்பட்ட குழந்தையை மீட்க மூன்று  தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசார் திருப்பூர், அம்மாபாளையம் பகுதியில் தங்கியிருந்த உமாவின் கண வர் விஜயை பிடித்து விசாரித்தனர். இதில்  உமா கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராய பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட் பட்ட பரங்கிநத்தம் கிராமத்தில் உள்ள ராணி  என்பவரது வீட்டில் தங்கி இருப்பதை அறிந்த னர். கச்சிராயப்பாளையம் போலீசார் உதவி யுடன் உமாவை திருப்பூர் போலீசார் கைது செய்து, பச்சிளம் குழந்தையை அவரிடம் இருந்து மீட்டனர். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந் தித்த மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு முறை குழந்தை கடத்தல் நடைபெற்றுள்ளதால் கூடு தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும், என்றார்.  மாவட்ட ஆட்சியர் வினீத் கூறுகையில், வரும் காலத்தில் இது போன்ற சம்பவங் கள் நடைபெறாமல் இருக்க தேவையான  அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள் ளது. இச்சம்பவம் குறித்து விசாரித்து நட வடிக்கை எடுக்கப்படும், என்றார்.

அணை நிலவரம்

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:30.71/60அடி நீர்வரத்து:129கன அடி
வெளியேற்றம்:116கனஅடி

அமராவதி அணை நீர்மட்டம்:55.06/90அடி.நீர்வரத்து:223கனஅடி
வெளியேற்றம்:15கனஅடி

மென் பொறியாளரிடம் மோசடி

கோவை, ஏப்.26- ஆன்லைனின் முதலீடு செய்யதால் அதிக லாபம் ஈட்டலாம் என கூறி ரூ. 5.60 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை - கணபதி, வரதராஜலு நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரி (26). மென் பொறியாளரான இவர் ஆன் லைனில் பகுதி நேர வேலை தேடி வந்தார். அப்போது, இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு குறுஞ் செய்தி வந்துள்ளது. அதன் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர்,  தான் பெரிய நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுவ தாகவும், யூடியூப் வீடியோவில் தங்களது நிறுவனம் பற்றி  விருப்பமும், பகிர்தல் செய்தால் கமிசன் கிடைக்கும் என  தெரிவித்தார். மேலும், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என தெரிவித்தார். இதனை நம்பி  புவனேஸ்வரி அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்குகளில் வெவ்வேறு கட்டங்களாக ரூ.5.60 லட்சம் அனுப்பினார். ஆனால், அதன் பின்னர் புவனேஸ்வரிக்கு அந்த நபர்  கூறியபடி கமிசன் தொகை மற்றும் வருமானம் கிடைக்க வில்லை. ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு என கூறி  புவனேஸ்வரியிடம் ரூ.5.60 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்தவர், கோவை மாநகர குற்றப்பிரிவு  காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

சூறைக்காற்று: வீட்டின் மேற்கூரை சேதம்

உதகை, ஏப்.26- கூடலூர் அருகே சூறைக்காற்றுடன் பெய்த மழையால் இரண்டு வீடுகளின் மேற்கூரை சேதமடைந்தன. நீலகிரி மாவட்டம், கூடலூர் சுற்றுவட்டத்திற்குட்பட்ட பல் வேறு இடங்களில் செவ்வாயன்று சூறாவளி காற்றுடன் கூடிய  மழை பெய்தது. இதனால், தேவர்சோலை சின்னையன் காலனியில் வசிக்கும் ராம்குமார் என்பவரது வீட்டின் மேற் கூரை, பலத்த காற்றால் முற்றிலுமாக சேதமடைந்தது. இதை யடுத்து, தேவர்சோலை காவல் துறையினர் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று வீட்டில் இருந்தவர்களை பாது காப்பான மீட்டு, மாற்று இடத்திற்கு அனுப்பி வைத்தனர். இதேபோல், தேவர்சோலை பஞ்சாயத்து காலனியில் ஜெயா என்பவரது வீட்டின் மேற்கூரையும் காற்றில் பறந்தன.  காற்று காரணமாக பல இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்பகுதிக்கு விரைந்த மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு ஒரு சில பகுதிகளில் மின் இணைப்பை சீரமைத் தனர்.

3 நாட்களுக்கு மழை

நாமக்கல், ஏப்.26- நாமக்கல்  மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய  வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, நாமக்கல்  கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது, நாமக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் வானம் லேசான மேக மூட் டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம் 30 முதல்  80 சதவிகிதம் வரை இருக் கும். இதனால் புதனன்று (நேற்று) 12 மில்லி மீட்டரும்,  வியாழனன்று (இன்று) 3  மில்லி மீட்டரும், வெள்ளி யன்று (நாளை) 2 மில்லி மீட் டரும் மழை பெய்ய வாய்ப்பு  உள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை  35 முதல் 36 டிகிரி செல்சியஸ்  வரை இருக்கும். இரவு நேர  குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி வரை இருக்கும். நாமக்கல் மற்றும்  அதனை சுற்றியுள்ள மாவட் டங்களில் ஆங்காங்கே மித மான மழை மாலை நேரங் களில் பெய்து வருகிறது. இருப்பினும், பகல் நேரங் களில் வெப்ப சலனம் அதிக மாகியுள்ளதால், பூச்சி இனப் பெருக்கம் அதிகமாகும். இதனால் கோழிப்பண் ணைகளில் ஈக்களை கட்டுப் படுத்தும் முறைகளை கையாள வேண்டும். ஈக்க ளின் எண்ணிக்கை அதிக மாக இருந்தால், கோழி களுக்கு மருந்து கலந்த தீ வனம் கொடுக்க வேண் டும். கால்நடை மற்றும் கோழிப்பண்ணைகளில் ஈக்களின் எண்ணிக்கையை கண்காணிக்க ஸ்பாட் கார்டை பயன்படுத்த வேண் டும். இவ்வாறு தெரிவிக் கப்பட்டுள்ளது.

திருமூர்த்தி அணை நிலவரம்

நீர்மட்டம்:30.71/60அடி 
நீர்வரத்து:129கன அடி
வெளியேற்றம்:116கன அடி
மழையளவு:1மி.மீ

இடைப்பாடியில் புதிய பேருந்து நிலையம்

இளம்பிள்ளை, ஏப்.26- இடைப்பாடி நகர்மன்ற கூட்டத்தில், ரூ.5 கோடி மதிப் பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுதல் உள்ளிட்ட 66  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.  சேலம் மாவட்டம், இடைப்பாடி நகர்மன்ற கூட்டம் செவ்வா யன்று நகராட்சி தலைவர் பாஷா தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில், இடைப்பாடி புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு  முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.  முன்னதாக, அதிமுக நகர்மன்ற குழுத் தலைவர் முருகன்  தலைமையிலான கவுன்சிலர்கள், போதிய குடிநீர் வழங்கு வதில்லை, முறையான கழிப்பிட வசதி இல்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நகர்மன்ற  தலைவர் பாஷா, தங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். இதன்பின் 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் சசிகலா மற்றும் திமுக, அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண் டனர்.

வந்தே பாரத் தொடக்க பயணத்தில் பாஜகவினருக்கே பயணச்சீட்டுகள்

திருவனந்தபுரம், ஏப்.26- வந்தே பாரத் விரைவு ரயிலின் முதல் ஓட்டத்தில் பெரும் பாலான பயணச்சீட்டுகளை பாஜக தொண்டர்களே பெற்ற னர். அவர்களுக்காக மூன்று பெட்டிகள் ஒதுக்கப்பட்டன. இந்த பயணச் சீட்டுகளை ரயில் ரசிகர்கள் என்ற குழு  ஏற்பாடு செய்தது. பாஜகவினர் கட்சி கொடியுடன் வந்தனர்.  முக்கிய பிரமுகர்களை தவிர்த்த தோடு வந்தே பாரத் துவக்க பயணத்தை கட்சி நிகழ்ச்சியாகவே மாற்றியது பாஜக. முதல் பயணம் மேற்கொள்ள பலர் ரயில்வே நிர்வாகத்தை அணுகி னர். ஆனால், அவர்களுக்கு பயணச்சீட்டு வழங்கப்பட வில்லை. அதே நேரத்தில், பாஜகவினர் தங்கள் விருப்பப்படி மாவட்ட வாரியாக சீட்டுகளை விநியோகித்துள்ளனர். 1024 சேர்கார் இருக்கைகளும், 104 எக்ஸிகியூட்டிவ் சேர்கார்  சீட்டுகளும் வழங்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரி வித்தாலும், அதிக அளவில் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன. பல நிலையங்களில் ரயிலில் ஏற பெரும் கூட்டம் காத்தி ருந்து ஏமாற்றத்துடன் திரும்பியது.

பேரிடர் காலத்தில் ஏற்படும் தீ விபத்து  விமானப்படை சார்பில் ஒத்திகை 

சூலூர், ஏப்.26- பேரிடர் காலத்தில் ஏற்படும் தீ விபத்துகளை கட்டுப் படுத்துவதற்காக ஒத்திகையை விமானப்படை வீரர்கள் மேற்கொண்டனர். கோவை மாவட்டம், சூலூரில் இந்திய ராணுவ படைக்கு  சொந்தமான விமானப்படை தளம் செயல்பட்டு வருகிறது. இங்கு விமானப்படைகளில் பயன்படுத்தப்படும் விமானங் கள் உருவாக்குவது, பயிற்சி விமானப்படை பிரிவு ஆகி யவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மாதந்தோறும் விமானப்படை விமானங்கள் மூலம் பேரிடர் கால ஒத்தி கையானது நடைபெறுவது வழக்கம். இதன்ஒருபகுதியாக, சூலூரில் உள்ள பெரிய குளத்தில் விமானப்படைக்கு சொந்த மான விமானத்தில் தண்ணீரை எடுத்து பேரிடர் காலங்களில் ஏற்படும் தீ விபத்தை கட்டுப்படுத்தும் பாதுகாப்பு ஒத்தி கையை நடத்தினர். இதில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத கலனில் நீரை எடுத்து உயரப் பறந்து ஒத்திகை நடைபெற்றது. இதனை குளத்தை சுற்றி இருந்த பொதுமக்கள் வியந்து பார்த்தனர்.

காப்புக்காட்டில் அத்துமீறி சாலை  ரேஞ்சர், வனவர் பணி இடமாற்றம்

உதகை, ஏப்.26- காப்புக்காட்டில் அத்துமீறி சாலை அமைக்கப்பட்டது தொடர்பாக ரேஞ்சர், வனவர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள மேட நாடு பகுதியில், காப்புக்காட்டில், 1.6 கி.மீ., தூரம் அத்துமீறி சாலை  அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முன்னாள் வனத்துறை அமைச்சரின் மருமகன் சிவக்குமார் குற்ற வாளியாக சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.  இந்த விவகாரத்தில், வனச்சரகர் சிவக்குமார், வனவர் தனபால் இருவரை மாவட்ட வன அலுவலர் கவுதம் பணியிட மாற் றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

கோவிலில் திருட்டு?

நாமக்கல், ஏப்.26- நாமக்கல், என்.கொச வம்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த  கோவில் கதவின் பூட்டு, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண் காணிப்பு கேமரா ஆகி யவை, கடந்த இரு வாரத் துக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட் டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்தநிலை யில், இந்த வழக்கு தொடர் பாக கொசவம்பட்டியைச் சேர்ந்த அருண்குமார் (22), சூர்யா (21), அஜித் (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, கோவிலில் எதுவும் திருடப்பட்டுள்ளதா? என  விசாரணை நடத்தி வருகின்ற னர். இந்த வழக்கில் தொடர்பு டைய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

பிளாஸ்டிக் தடையை தீவிரமாக்க உத்தரவு

கோவை, ஏப்.26- கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக்  தடையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்  என உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாசு கட்டு பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்ட அளவில் பிளாஸ்டிக் இல்லாத சூழலை உருவாக்க ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், கேரி பேக், பிளாஸ்டிக் டம்ளர் போன்றவை முழுமை யாக தடுக்க வேண்டும். உற்பத்தி செய்யக் கூடாது. வெளி மாநிலங்களில் இருந்து தடை  செய்த பிளாஸ்டிக் பொருட்களை அனுமதிக் கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், கோவை மாவட் டத்தில் தினமும் சுமார் 5 டன் எடையிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குவிகிறது. வாரந்தோறும் 35 முதல் 40 டன் பிளாஸ்டிக் சேகரமாவதாக உள்ளாட்சி நிர்வா கத்தினர் தெரிவித்துள்ளனர். மாநகராட்சியில் குவியும் பிளாஸ்டிக் மற்றும் இதர உள்ளாட் சிகளில் குவியும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் பணியை தனியார் சிமெண்ட் நிறு வனத்திடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. பிளாஸ்டிக்கை சிமெண்ட் தயா ரிக்க பயன்படுத்துவார்கள். மேலும், சாலை அமைக்கவும் பிளாஸ்டிக் பயன்படுகிறது. இது தொடர்பாக சிமெண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் குவிந்த பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து ஒப்படைத்தால், அவற்றை பயனுள்ள திட்டங்களுக்கு பயன் படுத்தப்பட்டது. கோவையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் கிடையாது. வெளி யூர், வெளிமாநிலத்தில் இருந்து வருகிறதா?  என பல்வேறு துறையினர் கண்காணிக்க வேண்டியிருக்கிறது. தடையை முழுமையாக அமலாக்கி பிளாஸ்டிக்கை வெகுவாக தவிர்க்கலாம். பொதுமக்களிடம் மேலும் விழிப்புணர்வு ஏற் படுத்த வேண்டியிருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகள் பிளாஸ்டிக் தடையை கடுமை யாக பின்பற்றும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

நீலகிரி: வயது முதிர்வால் 2 யானைகள் மரணம்

நீலகிரி, ஏப்.26- நீலகிரி வனப்பகுதியில் வயது முதிர்வால் 2 காட்டு யானைகள் மரணமடைந்துள்ளது.  நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெங்குமரஹடா கல்லாம்பாளையம் வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெண் காட்டு யானை இறந்து கிடந் தது. இதைத்தொடர்ந்து புலிகள் காப்பக கள  இயக்குநர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில், துணை இயக்குனர் அருண்குமார், வனச்சர கர் மணி வெங்கடேஷ் மற்றும் வனத்துறையி னர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதைய டுத்து, முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இறந்த யானைக்கு வயது 50 எனவும், வயது முதிர்வு  காரணமாக இறந்திருப்பது தெரியவந்தது.  இதேபோல், மசினகுடி சரகத்துக்கு உட் பட்ட அவரல்லா பிரிவு மாவனல்லா பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை  இறந்து கிடந்தது. இதைத்தொடர்ந்து வனச் சரகர் பாலாஜி தலைமையிலான வனத்துறை யினர் சென்று பார்வையிட்டனர். பின்னர் வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் உள் ளிட்ட மருத்துவ குழுவினர் காட்டு யானை யின் உடலை கூறாய்வு செய்தனர். இந்த யானையும் வயது முதிர்வு காரணமாக இறந் தது என தெரிய வந்தது. பின்னர் முக்கிய உடற் பாகங்கள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து பிற வன உயிரினங்களுக்கு இரையாகும் வகை யில் யானையின் உடல் அப்பகுதியில் விடப் பட்டது.

ரூ.1.30 கோடிக்கு மஞ்சள் ஏலம்

நாமக்கல், ஏப்.26- நாமகிரிப்பேட்டையில் உள்ள ஆர்சிஎம்எஸ் சங்க வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு விரலி ரகம் 2,400 மூட்டைக ளும், உருண்டை ரகம் 900 மூட்டைகளும், பனங்காலி ரகம் 90 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டன. இந்த  ஏலத்தில் 3,390 மஞ்சள் மூட் டைகள் ரூ.1 கோடியே 30 லட் சத்திற்கு ஏலம் போனது.

பழங்குடியின சிறுமி பாலியல் வன்கொலை: ஒருவர் சரண்

உதகை, ஏப்.26- பழங்குடியின சிறுமி பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், தப்பித்த கொலையாளியை பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜேஷ் குட்டன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.  நீலகிரி மாவட்டம், உதகை அருகே பைக் காரா பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தோடர் பழங்குடியின பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட ராஜேஷ் குட்டன் என்பவரை போலீ சார் தீவிரமாக தேடி வந்தனர். சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு இறந்து கிடந்த இடத்தில் போலீசார் சோதனை நடத்தி, கொலையாளி பயன்படுத்திய வீல் ஸ்பேனர் மற்றும் சில தடயங்களை  சம்பவ இடத்தில் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். இத னிடையே, ராஜேஷ் குட்டனின் செல்போன் எண் சிக்னலை வைத்து தேடி வந்த நிலை யில், மாணவியை கடத்திய பிறகு, காரில் வந்து நண்பர்களுடன் பேசும் வீடியோ வெளி யானது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ், கூடலூர் ஆய் வாளர் அருள் தலைமையில் போலீசார் வனப் பகுதியில் 2 ஆவது நாளாக தீவிரமாக தேடி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த  ராஜேஷ் குட்டன் புதனன்று பைகாரா காவல் நிலையத்தில் சரணடைந்தார். பழங்குடியின மாணவி பாலியல் பலாத்காரம் செய்து  கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம்  முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே வழக்கில் சம்பந்தப்பட்டவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில்,  இரண்டு நாட்களாக தலைமறைவாக இருந்த  ராஜேஷ் குட்டன் காவல் நிலையத்தில சரண டைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.