மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை சரவணம்பட்டி கிளையின் சார்பில் கேரளா வயநாடு வெள்ள நிவாரண நிதி ரூ.22 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. இதனை கிளைச் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் சிபிஎம் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபனிடம் வழங்கினர். உடன், எஸ்எஸ்.குளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் சண்முகசுந்தரம், ஒன்றியக் கமிட்டி உறுப்பினர் குட்டி (எ) செந்தில்குமார் ஆகியோர் உள்ளனர்.