districts

கரூர் மற்றும் தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

பணத்தை கீழே போட்டு விட்டு  அதிமுக நிர்வாகி தப்பி ஓட்டம்


கரூர், ஏப்.17-கரூர் மாவட்டம், தோகைமலை காவல் எல்லைக்குஉட்பட்ட பாதிரிபட்டி அதிமுக ஊராட்சி செயலாளராக இருப்பவர் ராஜேந்திரன். இவர் செவ்வாய்க்கிழமை 61 ஆயிரத்து 150 ரூபாய் கையில் எடுத்துச் சென்றுள்ளார்.அப்போது தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளை கண்டவுடன் பணத்தை கீழே போட்டுவிட்டு தப்பிஓடியுள்ளார். இதனைக் கண்ட தேர்தல் அலுவலர்கள் பணத்தை மீட்டு புதன்கிழமை குளித்தலை கோட்டாட்சியர்அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


நீலகண்ட பிள்ளையார் கோவில் திருவிழா


தஞ்சாவூர், ஏப்.17-தஞ்சை மாவட்டம் பேராவூரணி நகரில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் திருக்கோவில் உள்ளது. அதன் திருவிழா நடந்து வரும் நிலையில் வியாழனன்று தேரோட்டம் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி புதன்கிழமை மாலை ஆதனூரை சேர்ந்த செல்வம்என்பவர் யானை முன்னே வலம் வர அதன் பின்னரேபறவை காவடி எடுத்து அவரின் நேர்த்திக் கடனை செலுத்தினார். இது போன்ற காவடி எடுப்பு இப்பகுதியில் இதுதான்முதன் முறையாகும். இக்காவடியை காண பேராவூரணியை சுற்றியுள்ள கிராமத்தினர் திரளானோர் கூடி ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

;