தருமபுரி, செப்.28- காவிரி நீரை தரமறுக்கும் கர் நாடகா அரசை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை தரமறுக்கும் கர்நாடகா அரசை கண் டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எம்.முத்து தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர் பேசுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு மறுக் கிறது. தண்ணீர் தரவில்லை என் றால் தமிழ்நாட்டின் நெற்களஞ்சி யம் வறண்டு போகும். தமிழ்நாட் டின் உணவு உற்பத்தி கேள்விக்குறி யாகும். தண்ணீர் வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு, காவிரி நீர் பங்கீட்டை வைத்து பாஜக இரட்டை வேடம் போடு கிறது. கர்நாடகா சட்டமன்ற தேர்த லில் தோல்வியை தழுவிய பாஜக, வரும் நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு ஆதாயம் தேட நினைக்கிறது. காவிரி தண்ணீரை நம்பி தமிழ்நாட்டில் 15 மாவட்டங் களில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலா ளர்கள் உள்ளனர், என்றார். இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ பேசுகையில், உலக நாடு களில் சராசரியாக 1170 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. இதன் விளை வாக பூமியின் மேற்பரப்பில் 1 மில்லி மீட்டர் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மற்ற நாடுகள் 250 சதவிகிதம் மழை நீரை சேமிக்கின்றனர். இந்தியா வில் வேறும் 7 சதவிகித மழை நீரையே சேமிக்கின்றனர். மீதமுள்ள தண்ணீர் கடலில் கலக்கிறது. இந் தியாவில் நீர் மேலாண்மைக்கு எந்த திட்டமும் இல்லை. தேர்தலின் போது பாஜக அரசு நதிநீர் இணைப்பு திட் டத்தை நிறைவேற்றுவதாக வாக் குறுதி அளித்தது. ஆனால், கடந்த 9 ஆண்டுகாலமாக நாடாளுமன்றத் தில் நீர் மேலாண்மை குறித்து நாடா ளுமன்ற உறுப்பினர்கள் பேச அனு மதிப்பதில்லை. மாறாக கார்பரேட் களுக்கு சேவை செய்யும் அரசாக உள்ளது. தொழிலாளர், விவசாயி கள், விவசாய தொழிலாளர்கள் விரோத போக்கை மோடி அரசு கடைபிடித்து வருவதாக, குற்றஞ் சாட்டினார். தொடர்ந்து, மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் பேசு கையில், விவசாயிகளுக்கும், விவ சாய தொழிலாளர் நலனுக்காகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவ சாய தொழிலாளர் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. காவிரி நீரை நம்பி டெல்டா மாவட்டங்களில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட குறுவை சாகுபடி நிலங்கள் உள் ளன. தற்போது கூட, திருவாரூரில் பயிர் காய்ந்து போனதால் ஒரு விவ சாயி தற்கொலை செய்து கொண் டுள்ளார். எனவே, நீதிமன்ற தீர்ப்பின் படி தமிழ்நாட்டிற்க்கு தர வேண்டிய காவிரி நீரை வழங்கவில்லை என் றால், விவசாயிகள் மற்றும் விவ சாய தொழிலாளர்களை இணைத்து பெருந்திரள் போராட்டத்தில் ஈடுபடு வோம், என எச்சரிக்கை விடுத் தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தின் மாநிலப் பொருளாளர் பழனி சாமி, மாநிலக்குழு உறுப்பினர்கள் இ.கே.முருகன், பி.பாண்டியம்மாள், மாவட்டத் தலைவர் கே.கோவிந்த சாமி, மாவட்டப் பொருளாளர் எம். சிவா, நிர்வாகிகள் சி.ராஜா, பி. கிருஷ்ணவேணி, வெங்கடாச்சலம், செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.