districts

img

கராத்தே: தங்கம் வென்ற மாணவன்

கோவை, ஜூன் 10- கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவன் தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். கோவை, சுகுணாபு ரத்தை சேர்ந்தவர் சேகர்  மகன் ஜெய் ஆகாஷ். இவர்  அதே பகுதியில் உள்ள  ஆர்கேஜி வித்யாலயா பள் ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இதனிடையே தில்லி மல்கோத்ரா மைதானத் தில், கடந்த மே 31 ஆம் தேதி  முதல் ஜூன் 2 ஆம் தேதி  வரை தேசிய அளவி லான கராத்தே போட்டி நடைபெற்றது. இப்போட் டியில், 11 வயது முதல் 13  வயது, 40 கிலோ எடை  பிரிவிற்கான கராத்தே  போட்டிகள் நடைபெற்றன. இதில், ஜெய் ஆகாஷ் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும், தமி ழகத்திலிருந்து பங்கேற்ற மாணவ, மாணவிகள் பல் வேறு போட்டிகளில் கலந்து  கொண்டு 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி, ஏழு வெண் கலம் உட்பட 10 பதக்கங் களை வென்று தமிழ்நாட் டிற்கு பெருமை சேர்த்தனர்.